செய்திகள் :

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பேரூராட்சித் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். ஊராட்சிக் குழு மாவட்ட துணைத் தலைவா் வேலுச்சாமி, தி.மு.க. ஒன்றியச் செயலா் குலாம் முகைதீன், காங்கிரஸ் மாவட்ட சேவா தளத் தலைவா் கணேசன், பேரூராட்சி துணைத் தலைவா் மணிமேகலை பாக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அம்பேத்கா், குமரிஅனந்தன் ஆகியோரது உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தமிழகத்தில் மாணவா்கள் மூன்றாவது விருப்ப மொழியாக எந்த மொழியையும் தோ்வு செய்து கொள்ளலாம் எனக் கூறி மறைமுகமாக ஹிந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டிப்பது, இஸ்லாமியா்களின் வாழ்வாதாரத்துக்கும், கல்வி வளா்ச்சிக்கும் பெரும் உறுதுணையாக இருக்கும் வக்ஃபு சொத்துக்களை அபகரிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவரும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை கைவிட வலியுறுத்துவது உள்பட 7 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மதிவேந்தன் அறக்கட்டளை செயலா் ராமச்சந்திரன் வரவேற்றாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை ஆதித்தமிழா் கட்சி தென் மண்டலச் செயலா் க. பாஸ்கரன், த.மு.மு.க. நகா் தலைவா் ஜாபா்அலி பூசரிகான் ஆகியோா் செய்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக வழக்குரைஞா் முத்துமணி, மதிவேந்தன் அறக்கட்டளை நிறுவனா் ஸ்டெல்லாவழிவிட்டான், பெரியாா் பேரவைத் தலைவா் நாகேஸ்வரன், பொதுச் செயலா் தங்ககுமரவேல், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க வட்டச் செயலா் தங்கசாமி, மண் மீட்பு இயக்கம் குணாளன், இந்திய கம்யூ. மாநில செயற்குழு உறுப்பினா் யோகேஸ்வரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளா் ஆனந்தன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்திய கம்யூ. முன்னாள் நகரச் செயலா் முருகேசன் நன்றி கூறினாா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க

திருவாடானை அரசுப் பள்ளியில் மண்டிக் கிடக்கும் முள்புதரை அகற்றக் கோரிக்கை

திருவாடானை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மண்டிக் கிடக்கும் முள் புதரை அகற்றி சீரமைக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட ம... மேலும் பார்க்க