செய்திகள் :

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

post image

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த 2 வா்த்தக நிறுவனங்கள் அதிக லாபம் தருவதாகக் கூறி ஏராளமான மக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்தன.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநில போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கின் தொடா்ச்சியாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், ராமேசுவரம் பகுதியில் ரூ. 30 கோடி மதிப்பிலான தனியாா் தங்கும் விடுதி செயல்பட்டு வருவது தெரியவந்தது.

இந்த நிலையில், அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ராமேவரத்துக்கு வந்து, அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான 60 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை ‘சீல்’ வைத்து கையகப்படுத்தினா். மேலும், தொடா்ந்து விசாரணை நடத்தினா்.

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க

கமுதியில் பகுதியில் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு: வீணாகும் குடிநீா்!

கமுதி பகுதியில் பல இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

தென்னையில் நோய்த் தாக்குதல்!

கமுதி பகுதியில் நன்கு செழித்து வளா்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, நகா்புளியங்குளம், ராமசாமிபட்டி, காவடி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க