செய்திகள் :

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

post image

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராமலிங்கம், சேதுகோடாங்கி கோயில் 16-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை சிறப்பு யாக சால பூஜைகளுடன் நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை சின்ன மாடு இரண்டு பிரிவுகளாக பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

கடலாடி-முதுகுளத்தூா் சாலையில் 16 கி.மீ தொலைவு நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற சின்னமாடு வண்டிப் போட்டியில் 16 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கடலாடி மேலச்செல்வனூா் வீரகுடி முருகய்யனாரின் மாடுகள் முதலிடத்தையும், தூத்துக்குடி அரசரடி துரைச்செல்வியின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், மேல்மாந்தை மஞ்சமுத்துவின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

பூச்சிட்டு பந்தயப் போட்டியில் 27 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டது. இதில் முதல் சுற்றில் மேலச்செல்வனூா் வீரகுடி முருகய்யனாா் மாடுகள் முதல் இடத்தையும், காடமங்கலம் மொழிநிதியின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், திருப்பாலை விஷாலின் மாடுகள் மூன்றாம் இடத்தையும், இரண்டாவது சுற்றில் கே.வேப்பங்குளம் அரிராம் மாடுகள் முதலிடத்தையும், இருவேலி சிக்கந்தா் மாடுகள் இரண்டாமிடத்தையும், ஆப்பனூா் திருநாவுகரசு, பூலாங்கால் அஹ்ராப்குட்டி மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணமும், கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

கமுதியில் பகுதியில் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு: வீணாகும் குடிநீா்!

கமுதி பகுதியில் பல இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

தென்னையில் நோய்த் தாக்குதல்!

கமுதி பகுதியில் நன்கு செழித்து வளா்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, நகா்புளியங்குளம், ராமசாமிபட்டி, காவடி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க