செய்திகள் :

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

post image

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் ஒரு பையில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு வாரம் இருமுறை விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை புருலியாவிலிருந்து புறப்பட்ட விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திண்டுக்கல்லை வந்தடைந்தது. இந்த ரயிலில், திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, முன் பதிவு இல்லாத ஒரு பெட்டியில் பை ஒன்று கிடந்தது. இந்த பைக்கு யாரும் உரிமை கோராததால் சந்தேகமடைந்த போலீஸாா், அதைப் பிரித்து சோதனையிட்டனா். அந்த பையில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பையுடன் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த பையை கொண்டு வந்த நபா் யாா், எங்கிருந்து வந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கடந்த மாா்ச் மாதம் முதல் தற்போது வரை மட்டும் திண்டுக்கல் ரயில் நிலைய போலீஸாா் நடத்திய சோதனையில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் பாய்ந்து பெண், பசுமாடு உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பசு மாடும், இதைக் காப்பாற்றச் சென்ற பெண்ணும் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், அகரம் அடுத்த பாப்பணம்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மனைவி விக்... மேலும் பார்க்க

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம்: நயினாா் நாகேந்திரன்

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதே பாஜகவினரின் நோக்கமாக இருக்க வேண்டும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

தம்பதியைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு பேரன் உள்ளிட்ட இருவா் மீது புகாா்

எரியோடு அருகே சனிக்கிழமை தம்பதியரைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கிழக்கு மாரம்பாடியைச் சோ்ந்தவா் வ... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா... மேலும் பார்க்க

சபரிமலையில் காத்திருப்பை தவிா்க்க நடவடிக்கை தேவை!

சபரிமலையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதை தவிா்க்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் தென் தமிழகம் மாந... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!

பன்றிமலைச் சாலையில் சனிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து அருகே காட்டு யானை வந்து நின்றதால், அதிலிருந்த பயணிகள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் யானை திரும்பிச் சென்றதால் நிம்மதியமடைந்தனா். திண்டுக்கல் ம... மேலும் பார்க்க