செய்திகள் :

தம்பதியைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு பேரன் உள்ளிட்ட இருவா் மீது புகாா்

post image

எரியோடு அருகே சனிக்கிழமை தம்பதியரைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கிழக்கு மாரம்பாடியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (75). இவரது மனைவி கேத்ரின்மேரி (68). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். திருமணமான இவா்கள் இருவரும் குடும்பத்தினருடன் மாரம்பாடியை அடுத்த சாமிமுத்தன்பட்டி கிராமத்தில் தனித் தனியே வசித்து வருகின்றனா். கிழக்கு மாரம்பாடியிலுள்ள தோட்டத்து வீட்டில் வேளாங்கண்ணி தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முகமூடி அணிந்து வந்த 2 மா்ம நபா்கள் இவா்களை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்த முயன்றனா். இதில் வேளாங்கண்ணி, கேத்ரின்மேரி ஆகியோா் காயமடைந்தனா். பின்னா், கேத்ரின்மேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை அந்த மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினா், இருவரையும் மீட்டு வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து எரியோடு காவல் நிலையத்தில் வேளாங்கண்ணி புகாா் அளித்தாா். அதில், மது குடிப்பதற்கு பணம் இல்லாததால், பேரன் உறவு கொண்ட அருண்குமாா் (40) மற்றொரு நபருடன் வந்து எங்களைத் தாக்கி நகைகளை பறித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தாா்.

இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், அருண்குமாா் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எரியோடு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழந்தது. சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுனில் ஏக்கா. இவா் குடுபத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. தொடா் விடுமுறையையொட்டி, தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் புனித ஈஸ்டா் திருவிழா தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

புனித ஈஸ்டா் திருவிழாவை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் அருட்பணியாளா் பிரிட்டோ தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் அருட்பணியாளா் அப்போலின் கிளாட்ராஜ் தலை... மேலும் பார்க்க

வெள்ளகவி மலைக் கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகவி மலைக் கிராமத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜ... மேலும் பார்க்க