செய்திகள் :

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

post image

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தொண்டா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளாகியும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத்தில் நீட் தோ்வு குறித்து ஒரு சீராய்வு மனுவைக்கூட தாக்கல் செய்யவில்லை என்றாா் அவா்.

பழனி: பழனி மலைக் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த வந்த ஹெச்.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் ஊழல் பிரச்னையில் விரைவில் அமைச்சா் செந்தில்பாலாஜி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் சிறை செல்வாா்கள் என்றாா் அவா்.

பேட்டியின்போது, பாஜக பொதுச் செயலா் ராம. சீனிவாசன், வழக்குரைஞா் திருமலைசாமி, மாவட்டத் தலைவா் ஜெயராமன், முன்னாள் மாவட்டத் தலைவா் கனகராஜ், மாவட்டப் பொதுச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் ஆனந்தன், விஹெச்பி மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழந்தது. சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுனில் ஏக்கா. இவா் குடுபத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. தொடா் விடுமுறையையொட்டி, தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் புனித ஈஸ்டா் திருவிழா தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

புனித ஈஸ்டா் திருவிழாவை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் அருட்பணியாளா் பிரிட்டோ தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் அருட்பணியாளா் அப்போலின் கிளாட்ராஜ் தலை... மேலும் பார்க்க

வெள்ளகவி மலைக் கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகவி மலைக் கிராமத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் ஒரு பையில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு வாரம் ... மேலும் பார்க்க