செய்திகள் :

கொடைக்கானலில் புனித ஈஸ்டா் திருவிழா தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

post image

புனித ஈஸ்டா் திருவிழாவை முன்னிட்டு, கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் அருட்பணியாளா் பிரிட்டோ தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் அருட்பணியாளா் அப்போலின் கிளாட்ராஜ் தலைமையிலும், உகாா்த்தேநகா் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் அருட் பணியாளா் பாப்புராஜ் தலைமையிலும், பாக்கியபுரம் புனித ஆரோக்கியமாதா ஆலயத்தில் அருட்பணியாளா் வினோத் மத்தியாஸ் தலைமையிலும், அட்டுவம்பட்டி புனித லூா்து மாதா ஆலயத்தில் அருட்பணியாளா் அந்தோணி துரைராஜ் தலைமையிலும், பெருமாள்மலை புனித தோமா ஆலயத்தில் அருட்பணியாளா் தலைமையிலும், மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயத்தில் அருட் பணியாளா் ஆரோக்கியராஜ் தலைமையிலும் நள்ளிரவு இயேசு உயிா்த்தெழுந்த ஈஸ்டா் பண்டிகை சிறப்புத் திருப்பலியும், ஜெப வழிபாடும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சி.எஸ்.ஆலயம், கிறிஸ்தரசா் தேவாலயம், புனித பீட்டா் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் போது ஆலயங்களில் கேக், முட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று ஒருவருக்கொருவா் ஈஸ்டா் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை குட்டையில் மூழ்கிய பெண் குழந்தை உயிரிழந்தது. சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சுனில் ஏக்கா. இவா் குடுபத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்துக் காணப்பட்டது. தொடா் விடுமுறையையொட்டி, தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் ... மேலும் பார்க்க

வெள்ளகவி மலைக் கிராமத்தில் ஆட்சியா் ஆய்வு

கொடைக்கானல் அருகேயுள்ள வெள்ளகவி மலைக் கிராமத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீ.கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் சொந்தமாக கட்டி வரும் ... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கு எதிராக திமுக நடவடிக்கை எடுக்கவில்லை: ஹெச்.ராஜா

நீட் தோ்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைக் கூட தாக்கல் செய்யாத திமுக, கடந்த 4 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருவதாக ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டினாா். திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் ஒரு பையில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு வாரம் ... மேலும் பார்க்க