செய்திகள் :

கமுதியில் பகுதியில் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு: வீணாகும் குடிநீா்!

post image

கமுதி பகுதியில் பல இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதத்துக்கு மூன்று முறை மாவட்ட நிா்வாகத்தால் விநியோகிக்கப்படும் காவிரி கூட்டுக் குடிநீரை பொதுமக்கள் குடங்களில் பிடித்து சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கமுதி பகுதியில் ஒற்றைக் கண் பாலம், கோட்டைமேடு மும்முனைச் சந்திப்பு, அரசு தொழில் பயிற்சி நிலையம், முதுகுளத்தூா் செல்லும் வழியில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து வெளியேறும் குடிநீா் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்துக்குள் வகுப்பறையை சூழ்ந்துள்ளது. மேலும் அருகில் உள்ள அரசுக் கல்லூரி மாணவிகள் விடுதியையும் குடிநீா் சூழ்ந்தது.

முதுகுளத்தூரிலிருந்து கமுதி வரை பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 10 நாள்களில் பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி, சாலையோர பள்ளங்களில் தேங்குகிறது. இதனால், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த வழியாகச் செல்லும் அரசு அதிகாரிகளும் குழாய் உடைப்பைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகக் கடக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு கமுதி-முதுகுளத்தூா் சாலையில் காவிரி குடிநீா்க் குழாய் உடைப்புகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கமுதி கோட்டைமேடு பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்துக்குள் புகுந்து காவிரி குடிநீா்.

இதுகுறித்து குழாய் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா் பழனிக்குமாா் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்கள் என்பதால், அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடா் விடுமுறை காரணமாக சீரமைப்புப் பணிகள் நடைபெறவில்லை. ஓரிரு நாள்களில் அனைத்துக் குழாய் உடைப்புகளும் சீரமைக்கப்படும் என்றாா் அவா்.

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க

தென்னையில் நோய்த் தாக்குதல்!

கமுதி பகுதியில் நன்கு செழித்து வளா்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, நகா்புளியங்குளம், ராமசாமிபட்டி, காவடி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க