செய்திகள் :

விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்!

post image

இன்றைக்கு மற்ற போக்குவரத்தை போல விமான போக்குவரத்தையும் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு விமான நிறுவனங்களும் பல பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் பொதுவாக அனைத்து விமானங்களிலும் பின்பற்றப்படும் ஒரு விதி என்றால் பயணிகள் தங்களது மொபைலை ஏரோபிளேன் மோடில் போடுவது தான்.

விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பயணிகளை மொபைலை ஏரோப்ளேன் மோடில் வைக்க வலியுறுத்துவார்கள். எதற்காக அவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது?

விமானம் பறக்கும் போது மொபைலை ஏரோபிளேன் மோடில் வைக்கவில்லை என்றால் அது விமானத்தின் தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் அமைப்புகளில் இடையூறு ஏற்படுத்தலாம் என்பதே இதன் அடிப்படை.

இதன் விளைவாக விமானத்தின் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்பட்டு, விமானிகளுக்கு சிக்னல் கிடைப்பதில் சிக்கலை ஏற்படலாம். இதனால் அந்த விமான பயணத்தின் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

செல்போன்கள் எலக்ட்ரோமேக்னெட்டிக் (Electromagnetism) சிக்னல்களை வெளியிடுகின்றன. இதனால் விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்புகளில் இடையூறு ஏற்படலாம். மேலும் கட்டுப்பாட்டு அறைகளுக்கிடையான தகவல் பரிமாற்றத்தை இது பாதிக்கக்கூடும்.

இதன் காரணமாக மொபைலை ஏரோப்ளேன் மோடில் போட வலியுறுத்துகின்றனர். ஒரு பாதுகாப்பான விமான பயணத்தை உறுதி செய்வதற்காகவே விமானத்தின் டேக் ஆப் அல்லது லேண்டிங் போது இவ்வாறு செய்ய வலியுறுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Alien: K2-18b கிரகத்தில் உயிர்கள் நிறைந்த கடல்; அறிவியலாளர்கள் முன்வைக்கும் முக்கிய ஆதாரங்கள் என்ன?

ஏலியன்கள் இனியும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் வரும் பூதங்கள் அல்ல. பூமியிலிருந்து தொலை தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்பதற்கான வலுவான ஆதாரங்களை அறிவியல... மேலும் பார்க்க

"12,500 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்குத் திரும்பிய Dire Wolf" - அழிந்த உயிரினத்தை மீட்டது எப்படி?

12,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஓநாய் இனம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். முதன்முறையாக வெற்றிகரமாக மறு உருவாக்கம் அடைந்த உயிரினம் இதுதான் என்கின்றனர். அமெரிக்கா... மேலும் பார்க்க

தும்மலின் போது கண்களை திறந்து வைக்க முடியாதா?! ஏன் தெரியுமா?

தும்மல் என்பது நுரையீரலில் இருந்து மூக்கு வழியாக காற்றை வெளியேற்றும் ஒரு செயல்முறையாகும்.பொதுவாக கண்களை மூடி கொண்டு தான் தும்மல் ஏற்படும். ஏன் கண்களைத் திறக்கக் கொண்டு தும்மல் முடியவில்லை எப்போதாவது ய... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி - இதற்கு பின்னால் இவ்வளவு காரணம் இருக்கா?

வீடுகளில் பெரும்பாலும் அரளிச் செடியை அதன் விஷத்தன்மை காரணமாக வளர்ப்பது இல்லை. ஆனால் நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகம் இருப்பதை பார்த்திருப்போம். பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது க... மேலும் பார்க்க

`இது புகையல்ல...' - விமானங்களுக்குப் பின்னால் வெள்ளை நிற கோடுகள் எப்படி உருவாகின்றன தெரியுமா?

வானத்தில் விமானங்கள் பறந்து செல்லும்போது அதற்கு பின்னால் வெள்ளை கோடுகள் தோன்றும், அதனை பலரும் விமானத்திலிருந்து வரும் புகை என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மையில் புகையல்ல...பொதுவாக ஜெட் விமானங்கள... மேலும் பார்க்க

விமானத்தின் ஜன்னலில் இருக்கும் சிறிய துளை; எதற்காக இருக்கிறது தெரியுமா? - அறிவியல் காரணம் இதுதான்!

விமானத்தின் ஜன்னலில் ஒரு சிறிய துளை இருக்கும். இதற்கு பின்னால் இவ்வளவு பாதுகாப்பு காரணங்கள் இருக்கின்றன என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.ஒரு விமானம் புறப்பட்டு உயரத்தில் பறக்கும் போது காற்றின் அழ... மேலும் பார்க்க