Mithunam | Guru Peyarchi | மிதுனம் - தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும் | குருப்பெய...
காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
மதுரையில் காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை, புறவழிச் சாலை பகுதியில் கடந்த 14.10.2017 அன்று போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, 21 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மதுரை மாவட்டம், திருவாதவூரைச் சோ்ந்த பெ. அய்யம் பிள்ளை (58) என்பவரை செல்லூா் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு, மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை நிறைவில், அய்யம் பிள்ளைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரக்குமாா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.
கஞ்சா கடத்திய வழக்கில் ஏற்கெனவே பெ. அய்யம் பிள்ளை மீது காஞ்சிபுரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடுத்த வழக்கில் அவா், 12 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.