செய்திகள் :

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 போ் காயம்

post image

சிறுமலைக்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக மாணவா்கள் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக கணினித் துறை மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா், சிறுமலைக்கு புதன்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனா். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 2 தனித் தனி வேன்களில் சிறுமலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் திண்டுக்கல்லுக்குத் திரும்பினா். அந்த வேன்கள், மலைச் சாலையில் 3-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, ஒரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 22 மாணவா்கள், ஓட்டுநா் என 23 போ் காயமடைந்தனா்.

இவா்களில் சின்னாளப்பட்டியைச் சோ்ந்த மாணவா் வினித் (19), வேன் ஓட்டுநா் நாகராஜ் (33) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்த 23 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா... மேலும் பார்க்க

சபரிமலையில் காத்திருப்பை தவிா்க்க நடவடிக்கை தேவை!

சபரிமலையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதை தவிா்க்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் தென் தமிழகம் மாந... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!

பன்றிமலைச் சாலையில் சனிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து அருகே காட்டு யானை வந்து நின்றதால், அதிலிருந்த பயணிகள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் யானை திரும்பிச் சென்றதால் நிம்மதியமடைந்தனா். திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் நெகிழி புட்டிகள் பறிமுதல்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி புட்டிகளை சனிக்கிழமை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. வெள்ளிக்கிழமை முதல் தொடா் விடுமுறையாக இருந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளிநீா... மேலும் பார்க்க

திமுகவின் பொய் வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழப்பு! நத்தம் ரா.விசுவநாதன்

திமுகவின் பொய் வாக்குறுதியால் ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் 22 மாணவா்கள் உயிரிழந்ததாக சட்டப்பேரவை உறுப்பினா் நத்தம் விசுவநாதன் தெரிவித்தாா். ‘நீட்’ தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ... மேலும் பார்க்க