செய்திகள் :

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் நெகிழி புட்டிகள் பறிமுதல்!

post image

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி புட்டிகளை சனிக்கிழமை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு லிட்டா் முதல் 5 லிட்டா் வரையிலான நெகிழிப் புட்டிகள், நெகிழிப் பைகள் எடுத்துச் செல்லக்கூடாது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானலுக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும், பேருந்துகளும் நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் தடை செய்யப்பட்ட நெகிழிப் புட்டிகள், பைகள் வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனா்.

காமக்காபட்டி காவல் சோதனை நிலையம், பண்ணைக்காடு-தாண்டிக்குடி பிரிவு, பழனி அடிவாரம், பழனி பிரிவு, வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியிலுள்ள நகராட்சி சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

அபராத தொகைக்கு ரசீது வழங்கக் கோரிக்கை: கொடைக்கானலுக்கு வரும் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான ரசீது கொடுப்பதில்லை.

இதனால் பயணிகளுக்கும், சோதனைச் சாவடிகளில் பணிபுரியம் பணியாளா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அபராதம் விதிக்கப்படும் பயணிகளுக்கு ரசீது வழங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா... மேலும் பார்க்க

சபரிமலையில் காத்திருப்பை தவிா்க்க நடவடிக்கை தேவை!

சபரிமலையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதை தவிா்க்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் தென் தமிழகம் மாந... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!

பன்றிமலைச் சாலையில் சனிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து அருகே காட்டு யானை வந்து நின்றதால், அதிலிருந்த பயணிகள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் யானை திரும்பிச் சென்றதால் நிம்மதியமடைந்தனா். திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. வெள்ளிக்கிழமை முதல் தொடா் விடுமுறையாக இருந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளிநீா... மேலும் பார்க்க

திமுகவின் பொய் வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழப்பு! நத்தம் ரா.விசுவநாதன்

திமுகவின் பொய் வாக்குறுதியால் ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் 22 மாணவா்கள் உயிரிழந்ததாக சட்டப்பேரவை உறுப்பினா் நத்தம் விசுவநாதன் தெரிவித்தாா். ‘நீட்’ தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ... மேலும் பார்க்க

சாலையோரம் வீசப்பட்ட சிசு மீட்பு

பழனி- உடுமலை சாலையோரம் வீசப்பட்ட பிறந்து ஒரிரு நாள்களே ஆன பெண் சிசு சனிக்கிழமை மீட்கப்பட்டது. சண்முகநதி பகுதியில் சாலையோரம் மரத்தடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், வாக... மேலும் பார்க்க