செய்திகள் :

காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: ``ஏழை மக்கள் மீது தாக்குதல்'' - மத்திய அரசை கண்டித்த ராமதாஸ்!

post image

மத்திய அரசு சமையல் எரிவாயுவின் விலையை 50 ரூபாய் உயர்த்தியுள்ளது நாடு முழுவதும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

விலையேற்றத்தின்படி, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 503லிருந்து ரூ.553-ஆகவும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் வராத பொதுப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 803-லிருந்து ரூ. 853-ஆகவும் விலை உயரும்.

காஸ் சிலிண்டர்

இந்த விலை உயர்வுக்கு எதிராக, கச்சா எண்ணெய் விலை குறைவால் கிடைக்கும் லாபத்தை மக்களுக்கு அளிக்காமல் அரசே எடுத்துக்கொள்வது தவறு எனக் குரலெழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்

ராமதாஸின் பதிவில், "சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்; உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 818.50 லிருந்து ரூ.868.50 ஆக அதிகரித்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி

சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்காக மத்திய அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலர் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்பட்டு விட்டதால், பெட்ரோல், டீசல் விலைகள் விரைவில் குறையக்கூடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கடந்த வாரம் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல.

மக்களுக்கு கொடுக்காமல் மத்திய அரசே எடுத்துக்கொள்வதா?

அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விற்பனையின் லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை நுகர்வோருக்கு வழங்காமல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதன் மூலம் மத்திய அரசே அதை எடுத்துக் கொண்டதும் தவறு ஆகும்.

பெட்ரோல் மற்றும் டீசல்

எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவை. அவை மக்களைச் சுரண்டக் கூடாது. அதேபோல், மத்திய அரசும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விலைக் குறைப்பு நன்மையை தானே எடுத்துக் கொள்ளக் கூடாது. சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல், கலால்வரி உயர்வை திரும்பப் பெறுவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது ரூ.2 குறைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சிலிண்டர் விலை உயர்வு: ``இந்த நேரத்திலாவது திமுக சொன்னதை செய்ய வேண்டும்'' - தவெக விஜய் சொல்வதென்ன?

கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வுசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் ... மேலும் பார்க்க

Pawan kalyan: பவன் கல்யாணின் இளைய மகன் தீ விபத்தால் பாதிப்பு

ஜனசேனா கட்சி தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் இளைய மகன், மார்க் ஷங்கர் (8). சிங்கப்பூரில் பிரபல தனியார் பள்ளியில் படித்துவருகிறார் இவர். அவரது பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிர... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஏசி அறையில் இருந்தால் கிட்னி ஸ்டோன் வருமா?

Doctor Vikatan: ஏசி செய்யப்பட்ட அறைகளில் இருப்போருக்கும், அலுவலகங்களில் வேலை செய்வோருக்கும் கிட்னி ஸ்டோன் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என சமீபத்தில் வீடியோ ஒன்றில் பார்த்தேன். அது எந்த அளவுக்கு உண்மை.... மேலும் பார்க்க