செய்திகள் :

மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், ஆளுநர் என்பவர், மாநில அரசுடன் இணக்கத்துடன் செயல்பட வேண்டும், முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று காட்டமாகவே தெரிவித்துள்ளது.

மேலும், ஆளுநர்களுக்கான அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 200-இன் கீழ் முழுமையான தன்னிச்சை அதிகாரம் என்பது அனுமதிக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதாவது, மசோதா மீதான ஒப்புதலை நிறுத்திவைப்பதாக ஆளுநர் அறிவிக்க எந்த வாய்ப்பும் சட்டத்தில் இல்லை. ஆனால், இந்த அதிகாரத்தை வீட்டோ அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது. ஆனால், ஒரு மாநில ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது, ஒரு மசோதா ஆளுநருக்குக் கிடைக்கப்பெற்றதும், அவர் முன்பு மூன்று வாய்ப்புகள்தான் இருக்கும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது.

ஒருவேளை, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்காக கிடப்பில் வைத்திருந்தால், அது பற்றி 3 மாதத்துக்குள் தெரிவித்திருக்க வேண்டும்.

பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது.

எனவே, ஆளுநர் திருப்பி அனுப்பி மாநில பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வாய்ப்பே ஆளுநருக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநில அரசின் ஆலோசனை படி செயல்பட வேண்டும் என்றும், ஆளுநர் என்பவர் முட்டுக்கட்டை விதிப்பவராக இருக்கக் கூடாது என்றும் பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது என்றும் கூறியிருக்கிறது.

ஒரு மாநிலத்தின் அமைச்சரவை அளிக்கும் ஆலோசனைபடியே ஆளுநர் செயலாற்ற வேண்டும். ஆளுநருக்கு என தனி விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க