செய்திகள் :

'மக்களுக்காக ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்' - ராகுல் காந்தி

post image

மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு பிரச்னைகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,

"நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், காங்கிரஸ் தலைமையிலான நிலைக் குழுக்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான விவசாயக் குழு, குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் அளித்து விவசாயிகள், மீனவர்களுக்கான முக்கிய பாதுகாப்புகளுடன் பயிர்க் கழிவுகளை சேகரிப்பதற்கான கூடுதல் இழப்பீட்டை பரிந்துரைத்தது.

காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி உலகா, கிராமப்புற மேம்பாட்டுக் குழு மற்றும் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மக்களவையில் பேசினார்.

அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான குழு, கல்வி நிறுவனங்களில் அதிக ஆசிரியர்களை நியமிக்கவும், வினாத்தாள் கசிவை முடிவுக்குக் கொண்டுவர சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சரியாக நேரத்தில் ஊதியங்களை வழங்கவும் எடுத்துரைத்தது.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான வெளியுறவுக் குழு, வெளிநாடுகளில் குடியேறிய இந்திய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புகளின் அவசியத்தை அவையில் பேசியது.

மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்புக்கு இவையெல்லாம் ஒரு சில எடுத்துக்காட்டுகள்தான்.

எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாட்டு மக்களின் உரிமைகள், நல்வாழ்வுக்காகப் போராட ஒவ்வொரு ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படுத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா? முதுகெலும்பு பிரச்னை வராமல் தடுப்பது எப்படி?

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ‘ஏடிஎம்’ (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே சாா்பில் மகாராஷ்டிரத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை முறையில்... மேலும் பார்க்க

நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பாா்வையிட்ட முதல்வா், மத்திய அமைச்சா்

ஜனாசு: உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று அஸ்வினி ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் - பாஜகவை காங்கிரஸ் மட்டுமே வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி

மொடாசா: கொள்கைரீதியான போராட்டத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜகவை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை மாவட்ட அளவில் வல... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் கர்நாடக ஆளுநர்

பெங்களூரு: கர்நாடகத்தில் அரசு ஒப்பந்தப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைத்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது: உச்சநீதிமன்றம்

‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லுபடியை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் காலகட்டத்தில் தற்போதைய வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை ... மேலும் பார்க்க

அரசுத் துறை ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு! மசோதாவின் நிலை என்ன?

அரசுத் துறை ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கர்நாடக மாநில அமைச்சரவை அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக உறு... மேலும் பார்க்க