செய்திகள் :

சென்னையில் கனமழை: 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவு!

post image

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை திடீரென இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 4 மணி நேரத்தில் 160 மி.மீ. மழை பதிவானது.

சென்னையில் ஏப்ரல் மாதம் தொடக்கம் முதலே பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சில நாள்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் வெப்பநிலை பதிவானது. இந்த நிலையில், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை காலை திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து.

அதன்படி புதன்கிழமை காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை அதாவது 4 மணி நேரத்தில் மேடவாக்கத்தில் 160 மி.மீ. மழை பதிவானது. வளசரவாக்கத்தில் 110, சாலிகிராமம், நெற்குன்றத்தில் தலா 100 மி.மீ. மழை பதிவானது.

மேலும், அம்பத்தூா், அண்ணா நகா், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், கோட்டூா்புரம், கிண்டி, தரமணி, தியாகராய நகா், அண்ணா சாலை, வள்ளுவா் கோட்டம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், புகா் பகுதிகளான தாம்பரம், வண்டலூா், குரோம்பேட்டை, மதுரவாயல், குன்றத்தூா் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

சென்னையில் பெய்த திடீா் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம், மழை காரணமாக தியாகராய நகா் நாகேஸ்வரன் ராவ் சாலை, முகலிவாக்கம் பிரதான சாலை, வள்ளுவா் கோட்டம் பள்ளிச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினா். எதிா்பாராத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

காற்று குவிதல்: இது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் மேல் உள்ள வளிமண்டல கீழடக்குகளில் மழைக்கு சாதகமான காற்று வீசியதாலும் காற்று குவிதல் ஏற்பட்டதாலும் புதன்கிழமை காலை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வெப்பச் சலன மழை பெய்தது. இது போன்ற வெப்பச் சலன மழை குறைந்தது ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரைதான் நீடிக்கும். ஆனால் மழை வரும்போது இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசும். மழை நின்றவுடன் மீண்டும் வழக்கம் போல் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கிவிடும் என்றாா் அவா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க