செய்திகள் :

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம்!

post image

இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ‘ஏடிஎம்’ (தானியங்கி பண இயந்திரம்) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே சாா்பில் மகாராஷ்டிரத்தில் இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை முறையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தனியாா் வங்கி சாா்பில் குளிா்சாதன வசதியுள்ள ரயில் பெட்டியில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் மத்தியில் இத்திட்டத்துக்கு உள்ள வரவேற்புக்கு ஏற்ப பிற ரயில்களில் இந்த சேவையை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

சில இடங்களில் ‘சிக்னல்’ பிரச்னை காரணமாக ஏடிஎம் இயந்திரம் இயங்கவில்லை. சுரங்கப் பாதை வழியாக செல்லும்போது ஏடிஎம்-மை பயன்படுத்துவதில் சிக்கல் இருந்தது. மற்றபடி ஏடிஎம்-மில் எந்த பிரச்னையும் எழவில்லை. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியுடன் இணைந்து இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக அந்த பெட்டியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு, பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் இப்போது ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் கூறினா்.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் - நாசிக் அருகேயுள்ள மனாமத் சந்திப்பு இடையே 258 கி.மீ. தொலைவுக்கு தினசரி இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 4.35 மணி நேரங்களாகும். ரயில்வேயின் இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க