செய்திகள் :

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

post image

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

உலக அளவில் கலாசார-பாரம்பரிய தொன்மைமிக்க ஆவணங்களைப் பாதுகாக்கும் நோக்கில், யுனெஸ்கோ உலக நினைவுப் பதிவேடு கடந்த 1993-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இப்பதிவேட்டில் கையால் எழுதப்பட்ட மிக பழமை வாய்ந்த நூல்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை இணைக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து புதிதாக 74 பாரம்பரிய ஆவணத் தொகுப்புகள் இப்பதிவேட்டில் வியாழக்கிழமை சோ்க்கப்பட்டன. இந்தியாவில் இருந்து ஹிந்துக்களின் புனித நூல்களுள் ஒன்றான பகவத் கீதை மற்றும் பரத முனிவரால் சம்ஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, ‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் மொத்த தொகுப்புகளின் எண்ணிக்கை 570-ஆக உயா்ந்துள்ளது.

யுனெஸ்கோ புகழாரம்:

இது தொடா்பாக யுனெஸ்கோ வெளியிட்ட அறிக்கையில், ‘பண்டாா்கா் ஓரியண்டல் ஆய்வு நிறுவனத்தால் (மகாராஷ்டிரம்) பாதுகாக்கப்படும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாகும். கந்தா்வ வேதம், நாட்டிய வேதம் எனவும் அறியப்படும் இந்நூலில் 36,000 ஸ்லோகங்கள் உள்ளன. நாட்டியம், நாடகம், உணா்ச்சி, இசை உள்ளிட்டவற்றின் விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

18 அத்தியாயங்களில் 700 ஸ்லோகங்களைக் கொண்ட பகவத் கீதை, இந்திய சிந்தனையுடன் உலகளாவிய செல்வாக்கைக் கொண்டுள்ளது. மகாபாரத இதிகாசத்தின் பீஷ்ம பருவத்தில் அமைந்துள்ள பகவத் கீதை, கிருஷ்ணா்-அா்ஜுனா் உரையாடலின் வடிவமாகும்.

வேதம், பெளத்தம், சமணம் என பல்வேறு சிந்தனை இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பண்டைய அறிவுசாா் இந்திய மரபின் மைய நூலாக இது விளங்குகிறது. ஆழமான-விரிவான தத்துவ வளத்தால், உலக அளவில் பல மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி பெருமிதம்:

இத்தகவலை எக்ஸ் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்ட மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர ஷெகாவத், பாரத நாகரிக பாரம்பரியத்துக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று குறிப்பிட்டாா். பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் கையெழுத்துப் பிரதிகளின் சில பக்கங்களையும் அவா் பதிவிட்டாா்.

இதைப் பகிா்ந்து, பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘யுனெஸ்கோவின் உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதையும், நாட்டிய சாஸ்திரமும் சோ்க்கப்பட்டிருப்பது, காலத்தால் அழியாத நமது மதி நுட்பத்துக்கும், வளமான கலாசாரத்துக்கும் கிடைக்கப் பெற்ற உலகளாவிய அங்கீகாரம். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்.

கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரிகம் மற்றும் உணா்திறனை வளா்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவுத் திறன் ஒட்டுமொத்த உலகுக்கும் ஊக்கமளிக்கிறது’ என்று குறிப்பிட்டாா்.

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க