செய்திகள் :

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

post image

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 300 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 240 பயிற்சி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஊழியர்களுக்கு, ஏப்ரல் 18ஆம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், உள்மதிப்பீட்டுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறியதால், பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுவான அடித்தள பயிற்சி திட்டத்தின் கீழ், நீங்கள் நிறுவனத்தின் தகுதிபெறும் திறனைக் கொண்டிருக்கவில்லை. தகுதி பெறுவதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டும், சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் தேர்வு, பலகட்டத் தேர்வுகளிலும் மூன்று முறை பங்கேற்றும் தேர்ச்சி பெறத் தவறிவிட்டதாகவும், அதனால், இந்த பயிற்சிப் பணியை உங்களால் தொடர முடியாது என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனத்தின் பயிற்சி முடிந்து. சில தொடர்ச்சியான உள் தேர்வுகளில், இவர்கள் தோல்வியடைந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதமும் இதுபோன்றே 300 பயிற்சி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் பணியில் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு சில மாத பயிற்சிக் காலத்திலேயே இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதும் பேசுபொருளாகியிருந்தது.

தற்போது மீண்டும் பயிற்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது, தற்போத கல்லூரிகளில் படித்து வளாகத் தேர்வுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

போதைப்பொருள் வழக்கு: குட் பேட் அக்லி பட நடிகருக்கு ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் கைதான குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியபோ... மேலும் பார்க்க

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க