செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

post image

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புகழ்பெற்ற மச்சைல் மாதா ஆலயத்தை இணைக்கும் கிஷ்த்வார்-பத்தார் சாலையில் இன்று மூன்றாவது நாளாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுு.

இதுதொடர்பாக மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ராஜேஷ் குமார் ஷவான் கூறுகையில்,

கிஷ்த்வார்-பெத்தார் சாலையில் பதர்னகியின் சிங்ரா நல்லாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியை ஆய்வு செய்து, நிலச்சரிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிடுவதிலும், தற்போது நடவடிக்கைகளை மதிப்பிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றது.

தொடர்ச்சியான மண்சரிவு மற்றும் நிலச்ச்ரிவு அச்சுறுத்தல் காரணமாக மக்களின் பாதுகாப்பிற்காக சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோர். மலையடிவார கிராமத்தில் உள்ள சுமார் 22 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பொருள்கள், தங்குமிடம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை எந்தவொரு வீடுகளிலும் விரிசல்கள் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியில் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், சாலையின் 200 மீட்டருக்கும் அதிகமான பகுதி மண்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளதாகவும், மலையிலிருந்து தொடர்ந்து உருண்ட கற்கள் சாலை அகற்றும் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

போதைப்பொருள் வழக்கு: குட் பேட் அக்லி பட நடிகருக்கு ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் கைதான குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியபோ... மேலும் பார்க்க

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க