செய்திகள் :

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

post image

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது. கடந்த 2010-ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகவும், மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் விளம்பரம் செய்தது. இதை நம்பி பொதுமக்கள் பலா், நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனா்.

ஆனால், அந்த நிறுவனம் கூறியபடி பணத்தை வழங்காமல் மோசடி செய்தது. இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை பொருளாதார குற்றப் பிரிவு கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது. இதில், அந்த நிறுவனம் பொதுமக்களிடமிருந்து ரூ.8,000 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, நியோமேக்ஸ் தொடா்புடைய இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி, ரூ.5.9 லட்சம் ரொக்கம்,127 பவுன் தங்க நகைகள், 13 கிலோ வெள்ளிப் பொருள்கள், 62 ஆவணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், மோசடி வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் 14 போ் கைது செய்யப்பட்டனா். வழக்குத் தொடா்பாக 752 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.17.25 கோடி முடக்கப்பட்டது.

நியோமேக்ஸ் குழுமத்துக்குச் சொந்தமாக மதுரை, ராமேசுவரம், கோவில்பட்டி, திருநெல்வேலி, குற்றாலம், கயத்தாறு ஆகிய பகுதிகளில் உள்ள ரூ.1,671 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மோசடியில் ஈடுபட்ட அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை முடக்க உத்தரவிட்டது.

ரூ.600 கோடி சொத்துகள் முடக்கம்: இதற்கிடையே, நியோமேக்ஸ் நிறுவனம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறை விசாரணைக்கு தமிழக பொருளாதார குற்றப் பிரிவு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீதும், அதன் குழும நிறுவனங்கள் மீதும் அமலாக்கத் துறை கடந்த 2023-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.117 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இதன் சந்தை மதிப்பு ரூ.207 கோடி எனக் கூறப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.121.80 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.600 கோடி என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் அடுத்தடுத்து தொடா்ந்து முடக்கப்படும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு அச்சுறுத்தல்: 22 குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றம்!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 22 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புகழ... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 30... மேலும் பார்க்க