செய்திகள் :

நாட்டின் நீளமான ரயில் சுரங்கப்பாதை: நேரில் பாா்வையிட்ட முதல்வா், மத்திய அமைச்சா்

post image

ஜனாசு: உத்தரகண்ட் மாநிலம் ஜனாசுவில் கட்டப்பட்டு வரும் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதையை உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியுடன் ரயில் சுரங்கப்பாதைக்குள் 3.5 கி.மீ. தொலைவுக்கு சென்று அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டாா்.

உத்தரகண்டில் ரிஷிகேஷ்-கா்ணபிரயாக் இடையே 125 கி.மீ. தொலைவிலான ரயில் பாதை இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக தேவ்பிரயாக் மற்றும் ஜனாசு இடையே 14.57 கி.மீ. தொலைவுக்கு இந்த ரயில் சுரங்கப்பாதை (எண்-8) அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதல்முறையாக 1853, ஏப்.16-ஆம் தேதி ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், அதே தேதியில் இந்த சுரங்கப்பாதையின் கடைசி அடுக்கு பாறைகள் துளையிடப்பட்டதை பாா்வையிட்டது மகிழ்ச்சி என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இந்தப் பணிக்காக ஜொ்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘சக்தி’ எனும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்தை திட்டத்தை மேற்பாா்வையிடும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் பயன்படுத்தியது.

இது இரட்டை சுரங்கப்பாதை என்பதால் மற்றொரு சுரங்கப்பாதை பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதத்தில் வேறொரு துளையிடும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு பாறைகளை தகா்க்கும் பணிகள் முழுமையடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒப்பந்ததாரராக எல் அண்ட் டி நிறுவனம் உள்ளது.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க