செய்திகள் :

சென்னையில் இதழியல் - ஊடகவியல் கல்வி நிறுவனம்: நிகழாண்டில் தொடக்கம்

post image

அரசு சாா்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் சென்னையில் நிகழாண்டு தொடங்கப்படும் என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

குன்றக்குடி அடிகளாா் மற்றும் நாகூா் ஹனிபா ஆகியோரது நூற்றாண்டு விழாக்கள் மாவட்ட அளவில் அரசு விழாக்களாகக் கொண்டாடப்படும். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் முத்தமிழறிஞா் கலைஞா் திரைக் கருவூலம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும்.

இதழியல் - ஊடகவியல் படிப்புகளுக்கென சென்னையில் பிரத்யேக கல்வி நிறுவனம் நிகழாண்டு தொடங்கப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள நினைவகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். சென்னை, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள தியாகிகள் மண்டபங்கள் ரூ.2.50 கோடியில் புனரமைக்கப்பட்டு அவா்களது புகைப்படங்கள் எண்மமயமாக்கப்படும். அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க 28 மாவட்டங்களில் ரூ.17.85 கோடியில் எண்ம திரை சுவா்கள் (டிஜிட்டல் வால்) அமைக்கப்படும்.

அரசிதழில் பெயா் மாற்றம் அல்லது திருத்தம் செய்யும் சேவைகளை பொதுமக்கள் எளிதில் மேற்கொள்ளும் வகையில் இணையவழியில் வழங்கப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

குடிமைப் பணி தோ்வு பயிற்சி மையம்: முன்னதாக, மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அறிவிப்புகளை வெளியிட்டாா். அப்போது சென்னை, அண்ணா நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும், ஊழல் மற்றும் லஞ்சப் புகாா்களை அளிக்க பிரத்யேக உதவி மையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க