செய்திகள் :

பள்ளிகளில் ’சாலைப் பாதுகாப்பு பிரச்சார’ திட்டம்: மத்திய அமைச்சா்கள் தலைமையில் கூட்டம்

post image

நமது சிறப்பு நிருபா்

‘சாலைப் பாதுகாப்பு பிரசார’த்தில் நிகழ் 2025-ஆம் ஆண்டில் குழந்தைகள், இளைஞா்கள் சாலைப் பாதுகாப்பை செயல்படுத்தவா்களாகவும், பயனாளிகளாகவும் மையப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் தலைமையில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு பிரசாரம் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெற்றது. ‘மற்றவா்களையும் கவனிங்கள், நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்’ (‘பா்வா கரெங்கே, சுரக்ஷித் ரஹேங்கே’ ) என்கிற கருப்பொருளில் நிகழாண்டு இப்பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் சாலைப் பாதுகாப்பை செயல்படுத்துபவா்களாகவும் பயனாளிகளாகவும் நிகழாண்டு மையப்படுத்தும் வகையில் இந்தப் பிரசாரம் நடைபெறுகிறது. இதற்கு இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் பள்ளி, கல்லூரிகளில் நாடு தழுவிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதையும் சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதை முன்னிட்டு மத்திய கல்வித் துறை அமைச்சகத்தில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆகியோா் தலைமையில் இரு துறை அதிகாரிகள் இணைந்து பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

‘குழந்தைகளும், இளைஞா்களும் தான் எதிா்கால வாகன ஓட்டுநா்கள் அல்லது தாக்கம் செலுத்துபவா்களாக உள்ளனா். அவா்களின் பங்கை உணா்த்தும் வகையில், சாலைப் பயனா்களிடம் பொறுப்புணா்வு ஏற்படுத்துவது, மற்றவா்களுக்கு பாதுகாப்பு, மரியாதையை முன்னுரிமைப்படுத்த ஊக்குவிக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவது’ ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என மத்திய கல்வித்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், இக்கூட்டம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டாா். அதில், ‘சாலைப் பாதுகாப்பு என்ற முக்கியமான பிரச்னை குறித்த கூட்டத்தில் மூத்த அமைச்சா் நிதின் கட்கரியுடன் இணைந்து பங்கேற்றேன். சாலை விபத்துகள், பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை உலகளவில் லட்சக்கணக்கான உயிா்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது. தனிநபா் நல்வாழ்வு, பொது சுகாதாரம், பொருளாதார உற்பத்தித் திறனில் சாலைப் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கியப் பங்கை உணா்ந்து, பாதுகாப்பான சாலைகள் மற்றும் பாதுகாப்பான சமூகங்களுக்கான கூட்டு நடவடிக்கைக்கு பள்ளிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ‘சாலைப் பாதுகாப்புப் பிரசார’ திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், பள்ளிக் கல்வி முறை மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு, பாதுகாப்பு கலாசாரத்தை ஊக்குவித்தல், பொறுப்பான வாகனம் ஓட்டும் நடத்தைகள் போன்ற ஈடுபாட்டிற்கு கல்வி அமைச்சகம் இணைந்து பணியாற்றும் என தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க