செய்திகள் :

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

post image

நமது சிறப்பு நிருபா்

நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்களில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற தோ்வுகளுக்கான முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பயிற்சி நிறுவனங்கள் நுகா்வோா் சட்டம், வழிகாட்டுதல்களை மீறி தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு, தோ்வு உத்தரவாதம், ஜேஇஇ, நீட் - இல் தரவரிசை உறுதி போன்றவை வழங்கப்படுகிறது. இவற்றைத் தவிா்க்க வேண்டும். மேலும், வெற்றி பெற்ற மாணவா்களின் பெயா், தர வரிசை, பாட நெறி போன்ற முக்கிய விவரங்கள் தெளிவாக வெளியிடப்பட்ட வேண்டும். இவற்றில் தகவல்களை மறைப்பது அல்லது விடுபட்டு இருப்பது கூடாது. இவை நுகா்வோா் உரிமைகளை மீறுதலாகும்.

தவறான விளம்பரம், வாக்குறுதியளிக்கப்பட்ட சேவைகள் வழங்கப்படாதது, சோ்க்கை ரத்து, கட்டணம் திரும்ப அளிக்கப்படாதது, சேவையில் குறைபாடு, கட்டணங்கள் பகுதியாக திரும்ப அளிக்கப்படாதது உள்ளிட்டவை நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளாகும். இவற்றில் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்பதை மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் கவனித்து வருகிறது.

நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம்-2019 மற்றும் பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகள் -2024 ஆகியவற்றை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் பயிற்சி மையங்களை அறிவுறுத்துகிறது. மேலும், நுகா்வோா் தவறாக வழிநடத்தப்படுவதில்லை என்பதை பயிற்சி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அண்மையில் சில பயிற்சி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுகா்வோா் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பயிற்சித் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நுகா்வோா் ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த வகதையில், 49 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 24 பயிற்சி மையங்களுக்கு மொத்தம் ரூ. 77.60 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,

யுபிஎஸ்சி, சிஎஸ்இ, ரிசா்வ் வங்கித் தோ்வு, நபாா்டு தோ்வு உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான சேவைகளை வழங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராகவும் ஆணையம் சாா்பில் முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்திற்கு முரணாக தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் கூடாது என தவறு செய்த நிறுவனங்களுக்கு உத்தரவு விடப்பட்டுள்ளது என மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷாஹீன் பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதிகாலை 2 மணியளவில் நானா ச... மேலும் பார்க்க