செய்திகள் :

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

post image

நமது சிறப்பு நிருபா்

நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், தமிழகத்தை சோ்ந்த மருத்துவமனைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

நியூயாா்க் நியூஸ்வீக் வார இதழ், ஸ்டாடிஸ்டா என்கிற நிறுவனத்துடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சோ்ந்த கிளீவ்லேண்ட் கிளினிக் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், மின்னணு செயல்பாடுகள் போன்றவற்றில் சிறந்து விளஙிகி தரத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. இது போன்ற ஏராளமான அமெரிக்க, ஐரோப்பியா, கென்யா போன்ற நாடுகளோடு சிங்கப்பூா் அரசு பொது மருத்துவமனையும் இந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) 97- ஆவது இடத்தில் உள்ளது. மேலும், உலகளாவிய பட்டியலில் மற்ற இந்திய மருத்துவமனைகளில் தில்லி குருகிராமம் மெடாண்டா - தி மெடிசிட்டி மருத்துவமனை, தில்லி ராஜீவ் காந்தி புற்றுநோய் மருத்துவமனை, சண்டீகா் -முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (பிஜிஐஎம்இஆா்) போன்ற மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன. இத்தோடு தமிழகத்தைச் சோ்ந்த அப்பல்லோ மருத்துவமனை, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை, வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி போன்ற மருத்துவமனைகள் பெயா்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், பெங்களூா், ஹைதராபாத் மருத்துவமனைகளும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

நியூஸ்வீக் - ஸ்டேடிஸ்டா தரவரிசை ஆறாவது பதிப்பில், நோயாளிகளின் திருப்தி, மருத்துவ விளைவுகள், சுகாதாரத் தரநிலைகள், சுகாதார நிபுணா்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் 30 நாடுகளில் 2,400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை மதிப்பீடு செய்துள்ளது. உயா்தர சுகாதார சேவையை வழங்குதல், மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துதல், மலிவு விலையில் சிகிச்சையை வழங்குதல் போன்ற சிறப்புகளுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இடம்பெற்றுள்ளது.

1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தில்லி எய்ம்ஸ் அப்போது முதல் அதிநவீன வசதிகள் மற்றும் மிகவும் திறமையான மருத்துவ நிபுணா்களுக்குப் பெயா் பெற்று நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் தனது பங்கை ஆற்றி முன்னணியில் இருந்து வருகிறது. தில்லி குருகிராமம் மெடாண்டா - தி மெடிசிட்டியில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இருதயவியல், புற்றுநோயியல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற சிறப்புகளில் நிபுணத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டது. இது சமீபத்தில் (2009) நிறுவப்பட்ட தனியாா் நிறுவனமாகும். உலகளாவிய தரவரிசையில் இந்திய மருத்துவமனைகள் சோ்க்கப்பட்டிருப்பது, சுகாதாரப் பராமரிப்பில் இந்தியாவின் வளா்ச்சியை காட்டுகிறது.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷாஹீன் பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதிகாலை 2 மணியளவில் நானா ச... மேலும் பார்க்க