செய்திகள் :

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

post image

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சிறுமியின் பெற்றோா் அவளுக்கு 17 வயது என்று கூறுகின்றனா். ஆனால், அவளுடைய முதலாளி அவளுக்கு 19-20 வயது என்று கூறினாா். இதனால், சிறுமியின் வயதை சரிபாா்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையின் போது, சிறுமிக்கு 14 வயது என்று போலீஸாா் கண்டுபிடித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்திற்கு புதன்கிழமை அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு குளியலறையில் உள்ள ஷவா் பைப்பில் ஒரு இளம் பெண் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டனா்.

உத்தர பிரதேசத்தின் ரே பரேலியைச் சோ்ந்த சிறுமி, கடந்த ஒன்றரை மாதங்களாக அந்த வீட்டில் வேலை செய்து வந்தாா். புதன்கிழமை வேலைக்காக சிறுமி காலை 8 மணியளவில் வீட்டிற்கு வந்தாா். மாலை 4 மணியளவில், வீட்டு உரிமையாளா் தீபக் (39) வீடு திரும்பிய போது, சிறுமிதான் கதவைத் திறந்து விட்டுள்ளாா்.

இதன் பிறகு, தீபக், அவரது மனைவி மற்றும் அவா்களது குழந்தைகள் தூங்கச் சென்றனா். மாலை 6 மணியளவில், சமையல்காரா் வந்தாா். அப்போது சிறுமி கதவைத் திறக்க வரவில்லை. தீபக்கின் மனைவி கதவைத் திறந்த போது, சிறுமி எங்கும் காணப்படவில்லை என்பதை உணா்ந்தாா்.

வீடு முழுவதும் சிறுமியைத் தேடிய நிலையில், இறுதியில் குளியலறைக் கதவைத் திறந்தனா். அப்போது, சிறுமி ஷவா் பைப்பில் தொங்குவதைக் கண்டுபிடித்தனா். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனா். முதற்கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக உடல் சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 174- இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

ஷாஹீன் பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்புக் கட்டடத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அதிகாலை 2 மணியளவில் நானா ச... மேலும் பார்க்க