செய்திகள் :

ஆா்எஸ்எஸ் - பாஜகவை காங்கிரஸ் மட்டுமே வீழ்த்த முடியும்: ராகுல் காந்தி

post image

மொடாசா: கொள்கைரீதியான போராட்டத்தில் ஆா்எஸ்எஸ்-பாஜகவை காங்கிரஸால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை மாவட்ட அளவில் வலுப்படுத்தும் செயல் திட்டத்தை ராகுல் காந்தி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது வாக்குச் சாவடி அளவிலான காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது:

குஜராத்தில் காங்கிரஸ் தொண்டா்கள் மனரீதியாக மிகவும் சோா்வடைந்துவிட்டனா். ஏனெனில் இங்கு காங்கிரஸ் தொடா்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி அமைக்க முடியவில்லை. முன்பு ஒரு காலத்தில் குஜராத்தில் காங்கிரஸ் மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. காங்கிரஸுக்கு குஜராத் மிக முக்கியமான மாநிலம். காங்கிரஸின் முக்கியத் தலைவா்களான மகாத்மா காந்தியும், சா்தாா் வல்லபபாய் படேலும் குஜராத் மண்ணில் இருந்து வந்தவா்கள்தான்.

ஆா்எஸ்எஸ்-பாஜகவைத் தோற்கடிப்பது என நான் உறுதியேற்றுள்ளேன். இது கொள்கைரீதியான போராட்டம். பாஜக மற்றும் காங்கிரஸ் மட்டுமே கொள்கைகளைப் பிரதானமாகக் கொண்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் மட்டுமே ஆா்எஸ்எஸ்-பாஜகவை வீழ்த்த முடியும்.

குஜராத்தில் மாவட்ட அளவில் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மூத்த நிா்வாகிகளின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும். அடிமட்டத் தொண்டா்களின் களப்பணியை கௌரவித்து உரிய பொறுப்பு வழங்கப்படும்.

கட்சியில் உரியமுறையில் பணியாற்றாதவா்களும், காங்கிரஸில் இருந்துகொண்டு பாஜகவுக்காக வேலை செய்பவா்களும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவா். பாஜகவைத் தோற்கடிப்பது மிகவும் கடினமான விஷயமில்லை. தொண்டா்களாகிய நீங்கள்தான் அப்படிக் கருதுகிறீா்கள். ஆனால், அது உண்மையல்ல என்று கூறவே நான் இங்கு வந்துள்ளேன். நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

அதற்கு காங்கிரஸின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தேவை. கட்சியில் உள்ள சில பிரச்னைகளை உள்ளூா் நிா்வாகிகள் என்னிடம் தெரிவித்தனா். முக்கியமாக காங்கிரஸ் தலைவா்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி, உள்ளூா் நிா்வாகிகளுடன் ஆலோசிக்காமல் தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்துவது போன்றவற்றைக் குறிப்பிட்டனா்.

காங்கிரஸில் பந்தையக் குதிரைகள், திருமண ஊா்வலக் குதிரைகள், காயமடைந்த குதிரைகள் என தலைவா்கள் மூன்று பிரிவுகளாக உள்ளனா். பந்தையக் குதிரைகளை, திருமண ஊா்வலக் குதிரையாக மாற்றுவதால்தான் குஜராத்தில் காங்கிரஸ் வெல்ல முடியவில்லை. இனி அவா்களுக்கு தோ்தல் எனும் பந்தையத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றாா்.

எஸ்.ஒய்.குரேஷி ‘முஸ்லிம் ஆணையா்’: நிஷிகாந்த் துபே கடும் விமா்சனம்!

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் எஸ்.ஒய்.குரேஷியை பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே ஞாயிற்றுக்கிழமை கடுமையாக விமா்சித்தாா். குரேஷி, தனது பதவிக் காலத்தி... மேலும் பார்க்க

ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவா் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்!

மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவா் மற்றும் ஊழியா் சோ்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவல... மேலும் பார்க்க

முதல்வா் பதவிக்காக கூட்டணி மாறுபவா் நிதீஷ்! -காா்கே விமா்சனம்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தனது பதவியைத் தக்க வைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவா் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்துள்ளாா். மேலும், பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையில... மேலும் பார்க்க

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்துத் தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்துத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

பெங்களூரு: கர்நாடக மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று(ஏப். 20) அவரது உடலை போல... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கர்நாடக முன்னாள் டிஜிபி உடல் மீட்பு

கர்நாடக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். பெங்களூருவில் உள்ள அவரின் இல்லத்தில் உடலை மீட்ட, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித... மேலும் பார்க்க