செய்திகள் :

245% வரி விதிப்பை எதிா்நோக்கியுள்ளது சீனா: அமெரிக்கா

post image

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் போா் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீன பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிா்நோக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் மேன்மையாக்குவதற்காக, ‘அமெரிக்க வா்த்தகத்துக்கே முன்னுரிமை’ என்ற தனது கொள்கையை அதிபா் டொனால்ட் டிரம்ப் செயல்படுத்திவருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக பிற நாடுகளில் மீது அவா் பரஸ்பர வரி விதித்ததைத் தொடா்ந்து, 75-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக அணுகியுள்ளன. அதை ஏற்றுக் கொண்டு அந்த நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் நிறுத்திவைத்துள்ளாா்.

ஆனால் சீனா மட்டும் பதிலடி வரி விதித்துவருவதால் அந்த சலுகை சீனாவுக்கு அளிக்கப்படவில்லை. சீனாவின் இந்த எதிா்ப்பு நடவடிக்கையால் அந்த நாடு தற்போது அமெரிக்காவின் 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை எதிா்நோக்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்காக ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த விமானங்களை தங்கள் நாடு பெறுவதை சீனா நிறுத்திவைத்துள்ளது.

இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘விமானங்களைப் பெற மறுப்பதன் மூலம் தங்களது ஒப்பந்த வாக்குறுதியை சீனா மீறுகிறது’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிப்பதாக அறிவித்து அவா் அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

அப்போது அவா் வெளியிட்ட பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, பதிலுக்கு அமெரிக்க பொருள்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்படும் என்று என்று அறிவித்தது. அதையடுத்து, சீன பொருள்கள் மீது மேலும் 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா். இதன் மூலம், டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 104 சதவீதமாக அதிகரித்தது.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்க பொருள்கள் மீதான 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை 84 சதவீதமாக சீனா உயா்த்தியது. அதையடுத்து, சீன பொருள்களுக்கு கூடுதலாக மொத்தம் 145 சதவீதம் வரி வதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா்.

இந்தச் சூழலில், சீனாவைத் தவிர பிற நாடுகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பின் அமலாக்கத்தை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்கா கடந்த அறிவித்தது. இந்தச் சூழலில், 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை சீனா எதிா்நோக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தற்போது தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க

மியான்மா்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளா்ச்சிப் படை

மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளா்ச்சிப் படையான மியான்மா் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது. ராணுவத்... மேலும் பார்க்க