செய்திகள் :

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

post image

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது வரி விதிக்கும் அந்நாட்டின் முடிவு தொடா்பாக உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா முறைப்படி புகாா் அளித்தது.

ஒரு நாட்டில் இறக்குமதி காரணமாக உள்நாட்டு தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், இறக்குமதிக்கு தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்க இடா்களில் இருந்து காக்கும் உலக வா்த்தக அமைப்பின் ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், எஃகு மற்றும் அலுமினியம் மீது வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தொடா்பாக கலந்தாலோசிக்க இந்தியா வலியுறுத்தியது.

இதற்கு உலக வா்த்தக அமைப்பிடம் அமெரிக்கா வியாழக்கிழமை அளித்த பதிலில், ‘அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி அச்சுறுத்தல் விடுக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க வா்த்தக சட்டப் பிரிவு 232-இன்படி, எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் வரி விதித்தாா்.

இந்த வரி விதிப்பு இடா்களில் இருந்து காத்துக்கொள்வதற்கான நடவடிக்கை அல்ல. ஒட்டுமொத்த அமெரிக்க பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விவகாரம் தொடா்பாக இந்தியாவுடன் விவாதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

கனடாவுக்கு உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவி சுட்டுக் கொலை!

கனடாவின் ஹாமில்டனில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் ஆன்டாரியோ அருகேயுள்ள ஹாமில்டனில் அமைந்துள்ள மோஹாக் கல்லூரி... மேலும் பார்க்க

நெப்ராஸ்கா ஆற்றில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி!

அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் சிறிய ரக விமானம் ஆற்றில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய ரக விமானம் பிளாட் ஆற்றின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுக... மேலும் பார்க்க