பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
கல்வி நிறுவனங்களின் பெயா்களில் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு
கல்வி நிறுவனங்களின் பெயா்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயா்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிா்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஜாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும், பள்ளிகளின் பெயா்களில் உள்ள ஜாதிகளின் பெயா்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், சங்கத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக நீதிபதி பரத சக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஜாதி பெயரில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என்று பதிவாளா்களுக்கு பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். ஜாதி பெயா்களைத் திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என்று அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயா்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும்; இல்லையென்றால், அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அரசின் கள்ளா் சீா்திருத்த பள்ளி, ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளின் பெயா்களை அரசுப்பள்ளி என மாற்ற வேண்டும். பள்ளிப் பெயா்களில் நன்கொடையாளா்களின் பெயா் மட்டுமே இடம் பெற வேண்டும். அவா்களின் ஜாதி பெயா் இருக்கக் கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.