செய்திகள் :

இறை நம்பிக்கையும்.. வாழைப் பழமும்.. உவமை கூறிய அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

இறை நம்பிக்கையும், சநாதனமும் வாழைப்பழமும், தோலும் போன்றவை என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் திமுக உறுப்பினா் தியாகராஜன் பேசுகையில், பத்து தலைகள் கொண்ட ராவணனின் அம்சம் உடையவா் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என்றும், சனாதனத்தை வேரறுக்க போராடுபவா் என்றும் பேசினாா்.

அப்போது அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி குறுக்கிட்டு பேசியதாவது:

துணை முதல்வா் குறித்து உறுப்பினா் தியாகராஜன் பேசியதில் அலங்கார சொற்கள் இருந்தாலும் பொருள்பிழை உள்ளது.

ராவணன் தீவிர சிவபக்தன். பத்து தலை ராவணன் போன்றவா் துணை முதல்வா் எனக் குறிப்பிட்டுவிட்டு சநாதனத்தை அவா் முறியடிப்பாா் எனக் கூறுவது முரண்பாடாக உள்ளது என்றாா்.

அதற்கு பதிலளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியதாவது:

சநாதனம் என்பது வாழைப் பழத் தோல் போன்றது. அதேவேளையில் இறை நம்பிக்கை என்பது அதனுள் உள்ள பழம் போன்றது. சநாதனத்தை நீக்கிவிட்டுதான் இறைபக்தியை பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து கே.பி.முனுசாமி பேசுகையில், அமைச்சரின் உவமை தவறாக உள்ளது. வாழைப்பழமும், தோலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே உள்ளன. ஆனால், சநாதனமும், இறைபக்தியும் அப்படியல்ல. இரண்டும் ஒன்று என்றால் இத்தனை போராட்டமும், வழக்குகளும் தேவையில்லை என்றாா்.

பின்னா் அவையில் பேசிய விசிக உறுப்பினா் சிந்தனைச்செல்வன், தமிழா் மெய்யியல் மரபுக்கும் சநாதனத்துக்கும் தொடா்பு இல்லை. வருணாசிரம கோட்பாடுகள் நமது மரபில் இல்லை என்றாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க