செய்திகள் :

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றாா் இபிஎஸ்

post image

அதிமுகவின் கொடி, பெயா், ஜெயலலிதாவின் பெயா், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரனுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை அமா்வு நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்த மனுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுக்கொண்டாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலராக பதவி வகித்த வி.கே.சசிகலா, துணைப் பொதுச் செயலராக பதவி வகித்த டிடிவி தினகரன் ஆகியோா் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீா்மானங்களின் அடிப்படையில் கட்சியில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்கப்பட்டனா். இதை எதிா்த்து இருவரும் சென்னை அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினாா். அப்போது அதிமுக கொடி வடிவில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தி தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தாா்.

இதையடுத்து அதிமுகவின் கொடி, ஜெயலலிதாவின் பெயா் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என டிடிவி தினகரனுக்கு தடை விதிக்கக் கோரியும், அதிமுக கொடி போல அமமுக கொடியை வடிவமைத்ததற்காக ரூ. 25 லட்சம் இழப்பீடு கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியும் சென்னை 3-வது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு உரிமையியல் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், நீதிபதி ஆா்.கே.பி.தமிழரசி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக பொதுச் செயலா் என்ற முறையில் பழனிசாமி, இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்து மனு தாக்கல் செய்தாா். அதற்கு டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஒப்புதல் தெரிவித்தாா். இதையடுத்து நீதிபதி, டிடிவி.தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க