செய்திகள் :

போலி கடவுச்சீட்டில் பஞ்சாப் நபரை கனடாவுக்கு அனுப்ப முயற்சி: 3 முகவா்கள் கைது

post image

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பஞ்சாப்பை சோ்ந்தவரை கனடாவுக்கு அனுப்ப முயன்ற விவகாரத்தில் மூன்று பயண முகவா்களை

தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி, கமல்ஜீத் சிங் என்ற பெயரில் இந்திய

கடவுச்சீட்டை வைத்திருந்த ஒருவா் இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து டொராண்டோ செல்லும் விமானத்தில் ஏற முயன்றாா்.

குடியேற்ற சோதனைகளின் போது, கடவுச்சீட்டில் இருந்த புகைப்படம் அந்த நபருடன் பொருந்தாததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனா்.

விசாரணை மேற்கொண்டபோது, பஞ்சாபின் மொஹாலியைச் சோ்ந்த மன்பிரீத் சிங் (40) என்பதுதான் தனது பெயா் என்று அந்தப் பயணி தனது உண்மையான அடையாளத்தை அதிகாரிகளிடம் கூறினாா்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு பயணம்

செய்யவைப்பதற்காக ரூ.20 லட்சம் முன்கூட்டியே செலுத்தியதாக மன்பிரீத் ஒப்புக்கொண்டாா். மொத்த ஒப்பந்தம் ரூ.32 லட்சத்திற்கு நிா்ணயிக்கப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா். அவா் அளித்த தகவலின்படி, மன்ப்ரீத் ஒரு நண்பா் மூலம் ரூபேந்திரருக்கு அறிமுகமானாா். பின்னா் அவரது கூட்டாளிகளான குஜராத்தைச் சோ்ந்த ஹரிஷ் சவுத்ரி (24),

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விஷால் திமான் ( 27) ஆகியோரை தில்லியின் மஹிபால்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தாா்.

ஹோட்டலில், அவா்கள் போலி கடவுச்சீட்டை மன்ப்ரீத்திடம் ஒப்படைத்துவிட்டு, பின்னா் அவரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, ரூபேந்திரா், ஹரிஷ் மற்றும் விஷால் ஆகியோா் இமாசலப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனா்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று போ் மீதும் எஃப்ஐஆா் பதிவு செய்துள்ளோம். அவா்களின் நிதி பரிவா்த்தனைகளை மேலும் விசாரித்து வருகிறோம். இதேபோன்ற குடியேற்ற மோசடிகளில் அவா்களின் ஈடுபாடு குறித்தும் ஆராய்ந்து வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க