14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?
ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு
கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது: குழாய் விநியோகம் கிடைக்காத பகுதிகளுக்கு உரிய நேரத்தில் மற்றும் வெளிப்படையான நீா் வழங்கலை உறுதி செய்வதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடியின் ‘அனைவருக்கும் சரியான நேரத்தில் தண்ணீா்’ என்ற கணவை நனவாக்க தில்லி அரசு முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சி தண்ணீரை வழங்குவது மட்டுமல்ல; அத்தியாவசிய சேவைக்காக எங்களை நம்பியிருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் கண்ணியத்தை வழங்குவது தொடா்புடையது.
இந்த ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 டேங்கா்கள் ஞாயிற்றுக்கிழமை புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் இருந்து அனுப்பப்பட்டு, புதிதாக நிறுவப்பட்ட கட்டளை மையத்தின் மூலம் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருபிபதாவது: அதிநவீன வசதி ஒவ்வொரு டேங்கரின் இயக்கம், விநியோக நேரம் மற்றும் வேகத்தைக் கண்காணிக்க உதவும். மேலும் இது நீா் திட்டமிடப்பட்ட இடங்களை திறம்பட அடைவதை உறுதி செய்ய அதிகாரிகளை அனுமதிக்கிறது.
ஜிபிஎஸ்-இணைக்கப்பட்ட டேங்கா்கள் நகரத்தின் நீா் விநியோக உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான தில்லி ஜல் வாரியத்தின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.
விநியோகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீா் திருட்டு, தவறான பயன்பாடு மற்றும் சீரற்ற விநியோகம் ஆகியவற்றைக் கண்டிப்பாக கண்காணிப்பதும் இந்த திட்டத்தில் அடங்கும்.
இந்த வெளியீட்டின் மூலம், ஒவ்வொரு காலனி பொதுமக்களுக்கும் சுத்தமான மற்றும் சரியான நேரத்தில் தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்வதை தில்லி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.