செய்திகள் :

வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!

post image

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் வக்ஃப் சட்ட திருத்த விவகாரம் குறித்த விவாதத்தின்போது, தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, இந்த மசோதா சட்டமானது.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 12 நாள் இடைவெளிக்குப்பின் இன்று(ஏப். 7) கூடிய பேரவை கூட்டத்தொடரில், வக்ஃப் சட்ட திருத்தம் குறித்து விரிவாக விவாதிக்க ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி(என்.சி) கொண்டுவந்த தீர்மானத்தை அவைத்தலைவர் அப்துல் ரஹீம் ராத்தெர் நிராகரித்தார். இவ்விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

இந்த நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் அவைத்தலைவரின் நடவடிக்கைக்கு எதிராகப் பேசினர்.

தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த எம். எல்.ஏ தன்வீர் சாதிக் பேசும்போது, “ஜம்மு - காஷ்மீர் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதொரு பகுதி. அப்படியிருக்கும்போது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதா குறித்து இங்கு விவாதிக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

வக்ஃப் விவகாரம் ஜம்மு - காஷ்மீர் மக்களிடம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, நாங்கள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும்” என்றார்.

அப்போது ஒரு உறுப்பினர், ‘தமிழ்நாட்டில் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக’ சுட்டிக்காட்டி பேசினார்.

இதற்கு பதிலளித்த அவைத்தலைவர், ’வக்ஃப் விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதாவது ஏப். 6-ஆம் தேதிக்கு முன்னரே, தமிழ்நாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக’ குறிப்பிட்டார்.

வக்ஃப் விவகாரத்தால் கடும் கூச்சலும் குழப்பமும் நிறைந்திருந்ததால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அவை நிகழ்வுகள் அனைத்தும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!

போபால்: போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டாக்டர் நரேந்திர ஜான் கேம் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்த... மேலும் பார்க்க

மணிப்பூரில் பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு: ஊரடங்கு அமல்!

வக்ஃப் விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறையால் மணிப்பூரில் லிலோங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(... மேலும் பார்க்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர்: பிரிட்டனுடன் பொருளாதார பேச்சுவார்த்தை!

புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் லண்டன் செல்கிறார். இதற்காக அவர் திங்கள்கிழமை(ஏப... மேலும் பார்க்க

பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!

பிகார் மாநிலத்தில், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிக்கூண்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதிலிருந்த கடிகாரம் நின்றுபோன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.பிகார் ஷ... மேலும் பார்க்க

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை ரூ... மேலும் பார்க்க