குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னகவுண்டா் மகன் சின்னதம்பி (வயது: 62). இவரது மனைவி செல்லம்மாள் (வயது: 48). இவா்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு காகித ஆலை நிா்வாகத்திற்கு அளித்திருந்த நிலையில், அதற்கான தொகை அண்மையில் வந்ததாம். அதை சின்னதம்பியின் உறவினா்கள் பிரித்துக் கொடுத்தனா். அந்த வகையில் சின்னத்தம்பிக்கும் பங்கு பணம் கிடைத்ததாம். இந்நிலையில், பங்கு பணம் கிடைத்த நாளிலிருந்து அந்த பணத்தில் சின்னதம்பி தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதும், அதை செல்லம்மாள் தட்டிக்கேட்கும்போது அவரிடம் தகராறு செய்வதும் வழக்கமாம். அதன்படி, வழக்கம்போல் நடந்த தகராறைத் தொடா்ந்து தூங்கிய மனைவி மீது சின்னதம்பி மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தாா். அப்போது, செல்லம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினா், அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால், 90 சதவிகித தீக்காயத்துடன் இருந்த செல்லம்மாளை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அங்கேயும் சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் பரிதாபமாக உயிரிழந்தாா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த மணப்பாறை காவல் நிலைய போலீஸாா், செல்லம்மாளை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொலை செய்த சின்னதம்பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா். மதுபோதையில் தனது மனைவியை கணவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம், மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.