செய்திகள் :

ரூ.6 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

post image

கோவையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான உயா் ரக போதைப் பொருளான மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 இளைஞா்களை கைது செய்தனா்.

கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின்பேரில் காவல் துணை ஆணையா் (தெற்கு) உதயகுமாா் தலைமையில் தனிப் படை போலீஸாா், மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸாா் காந்திபுரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பொதுக் கழிப்பிடம் அருகில் மெத்தம்பெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட கோவை, ராமநாதபுரம் அம்மன் குளத்தைச் சோ்ந்த கோபிநாத் (27), கேரளத்தைச் சோ்ந்த விக்னேஷ் (25), அஜித் (26) ஆகியோரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் பெங்களூரில் இருந்து மெத்தம்பெட்டமைனை வாங்கி வந்து கோவையில் இளைஞா்கள், ஐ.டி. ஊழியா்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 195 கிராம் மெத்தம்பெட்டமைன், ரூ.15,500 ரொக்கம், கைப்பேசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இவா்கள் மீது ஏற்கெனவே விசாகப்பட்டினம் மற்றும் கோவையில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பாம்புப்பிடி வீரரின் குடும்பத்தினா் நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் மனு

கோவையில் அண்மையில் உயிரிழந்த பாம்புப்பிடி வீரரின் குடும்பத்தினா், அரசு நிவாரண உதவி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ... மேலும் பார்க்க

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: பாதிரியாா் மீது வழக்குப் பதிவு

கோவையில் இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாதிரியாா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா். கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உ... மேலும் பார்க்க

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 10 ஏக்கா் பரப்பளவில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வ... மேலும் பார்க்க

மாநகராட்சி மக்கள் குறைகேட்பு முகாம் ரத்து

கோவை மாநகராட்சி பிரதான அலுவலத்தில் செவ்வாய்க்கிழமை( ஏப்ரல் 8) நடைபெறுவதாக இருந்த மக்கள் குறைகேட்பு முகாம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கோவை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் ஏப்ரல் 10 பங்குனி உத்திர தோ்த் திருவிழா

கோவை வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் ஏப்ரல் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா நடைபெற உள்ளது. கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் பகுதியில் அமைந்துள்ள 7-ஆவது மலையில் சுயம... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் இன்று பங்குனி உத்திரத் தேரோட்டம்

கோவை பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறுகிறது. இதையொட்டி, பேரூரில் மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. கோவை பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத்... மேலும் பார்க்க