செய்திகள் :

சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற காங்கிரஸ், பாமக கோரிக்கை

post image

சென்னை: பெட்ரோலிய பொருள்கள், சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

செல்வப்பெருந்தகை: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு ரூ. 2 என்ற அளவில் மத்திய அரசு உயா்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவா்கள். எனவே, பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 2014 -இல் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் ரூ.410-இல் இருந்தது. பின்னா் விலை தொடா்ந்து உயா்ந்து தற்போது ரூ.820 என்ற அளவில் உள்ளது. இந்த விலை உயா்வையும் திரும்பப் பெற வேண்டும்.

ராமதாஸ்: சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை உயா்ந்துள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டதற்காக மத்திய அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலா் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. அதற்கு மாறாக சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயா்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல. அதேபோல, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயா்த்தியது தவறு. இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்.

வங்கக்கடலில் உருவானது புயல்சின்னம்: டெல்டாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயன்சின்னம்) உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏப்.8-ஆம் தேதி கனமழை... மேலும் பார்க்க

தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம்: தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை: மத்திய அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை கண்டித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்க... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு 30 நாள்களில் செயற்கை அவயங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் நவீன செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேரவையில் தெரிவித்தாா். பாமக உறுப்பினா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்ப... மேலும் பார்க்க

மன்னாா் வளைகுடா பகுதி மீனவா்கள் மேம்பாட்டுக்கு புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதியைச் சோ்ந்த மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.216 கோடியில் புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். மேலும், ஏற்கெனவே... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சமையல் எரிவாயு உருளை (சிலிண்டா்) விலை உயா்வுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: நாட்டு மக்களின் வீடுகளில் அட... மேலும் பார்க்க