செய்திகள் :

கோவை: கல்லூரி மாணவியுடன் பழகிய மாணவர் மீது கொலை வெறி தாக்குதல் - 2 பேர் கைது

post image

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்த காரணத்தால் சொந்த அண்ணனே அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆணவ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவையில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

காதல்

தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சஞ்சய். இவர் தன் வகுப்பில் உள்ள வேறு மத பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது அந்த மாணவியின் பகுதியில் இருந்த சில இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை. முகமது பஷீத் மற்றும் முகமது சஜீத் ஆகிய இளைஞர்கள் சஞ்சயை உக்கடம் அருகே ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பஷீத்தின் நண்பர்கள் 8 பேரும் இருந்துள்ளனர். “எதற்காக அந்த பெண்ணுடன் பேசுகிறாய்.

தாக்குதல்

இனி நீ அவளுடன் பேசக் கூடாது.” என்று அவரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து சஞ்சயை பீர் பாட்டில் மற்றும்  கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சஞ்சயின் தலை, முகம், கண் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

பிறகு அவர்கள் சஞ்சயை கல்லூரியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். சஞ்சய் தன் அப்பாவிடம் முறையிட்டுள்ளார். அவர் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறை 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து

கைது

முகமது பஷீத் மற்றும் முகமது சஜீத் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள். தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவருடன் பழகுவது பிடிக்காத காரணத்தால் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னகவுண்டா் மகன் சின்னதம்பி (வயது: 62). இவரது மனைவி செல்லம்மாள் (வயது: 48). இவா்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு... மேலும் பார்க்க

கடலூர்: மூன்று முறை கருக்கலைப்பு… ஆபாசமாகப் பேசி, காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். 32 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளம்பெண்னை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தி... மேலும் பார்க்க

கடலூர்: `அவர் எனக்கும் புருஷன்தான்...’ - கணவரை உரிமை கொண்டாடிய அக்காவை கொலை செய்த தங்கை

கடலூர் சோழத்தரம் கிராமத்தை சேர்ந்தவர் மேகலைவன். இவருக்கு சரிதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். சரிதாவின் மூத்த சகோதரியான சங்கீதாவும் அதே பகுதியில்தான் வசித்து வந்தார். சங்கீதாவின் கணவர... மேலும் பார்க்க

சென்னையில் திருட்டு; வெளிநாட்டிலிருந்து கண்டுபிடித்த ஓனர் - வசமாக சிக்கிய பிரபல திருடர்கள்!

சென்னை அசோக்நகர், சீனிவாச பிள்ளை தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ரமணன் (58). இவர் தன்னுடைய மனைவியுடன் பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் அவரது மகள்களை பார்க்க கடந்த 4.4.2025-ம் தேதி சென்றார். 7-ம் தேதி அதிக... மேலும் பார்க்க

கர்நாடகா: மனைவியைக் கொன்றதாகச் கணவனுக்குச் சிறை; உயிரோடு உலா வந்த மனைவி; என்ன நடந்தது?

இறந்த மனைவிக்காக இறுதிச்சடங்கு செய்த, துக்கம் அனுசரித்த கணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இறந்ததாக நம்பப்பட்ட பெண் உயிரோடு நடமாடிய ஆதிர்ச்சி செய்தி வெளியாகி பரபரப்... மேலும் பார்க்க

மத்திய பிரதேசம்: போலி இதய மருத்துவர்; பறிபோன 7 உயிர்கள்; தப்பித்த சில நோயாளிகள். நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஜான் கெம் என்ற இதயநோய் நிபுணர் பணி செய்து வந்துள்ளார். இவர் செய்த இதய அறுவை சிகிச்சையால் ஒரே மாதத்தில் 7 ... மேலும் பார்க்க