செய்திகள் :

கடலூர்: `அவர் எனக்கும் புருஷன்தான்...’ - கணவரை உரிமை கொண்டாடிய அக்காவை கொலை செய்த தங்கை

post image

கடலூர் சோழத்தரம் கிராமத்தை சேர்ந்தவர் மேகலைவன். இவருக்கு சரிதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். சரிதாவின் மூத்த சகோதரியான சங்கீதாவும் அதே பகுதியில்தான் வசித்து வந்தார். சங்கீதாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கணவர் இல்லாத சங்கீதாவுக்கு மேகலைவன் அவ்வப்போது சில உதவிகளை செய்து வந்திருக்கிறார்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. அதனால் இருவரும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். இவர்களின் காதல் சரிதாவுக்கு அரசல்புரசலாக தெரிய வந்ததால், கணவரையும், தன்னுடைய அக்காவையும் கண்டித்திருக்கிறார்.

சடலமாக சங்கீதா

ஆனால் அதன்பிறகு இருவரும் காதலை தொடர்ந்திருக்கிறார்கள். அதனால் அவ்வப்போது சங்கீதாவுக்கும், மேகலைவனுக்கும் வாக்குவாதம் நடைபெற்று வந்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மேகலைவனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார். அதனால் சரிதாவுக்கு தெரியாமல் மருத்துவமனையில் மேகலைவனை சந்தித்த சங்கீதா, அவருக்கு தேவையான உதவிகளை செய்திருக்கிறார்.

அது சரிதாவுக்கு தெரிய வந்திருக்கிறது. அதில் கோபமடைந்த அவர், நேற்று முன் தினம் இரவு தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு அக்கா சங்கீதாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். சங்கீதா கதவை மூடிக் கொண்டு வீட்டினுள் இருந்ததால், கதவை திறக்குமாறு சத்தம் போட்டிருக்கிறார் சரிதா.

அதில் பயந்து போன சங்கீதா கதவை திறக்கவில்லை. அதனால் சரிதாவின் மகன்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். தொடர்ந்து அங்கிருந்த சங்கீதாவை மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். அப்போது சங்கீதாவின் புடவையால் அவரின் கழுத்தை நெரித்தார் சரிதா. சரிதாவிடம் இருந்து தன்னை விடுவிக்க நீண்ட நேரம் போராடிய சங்கீதா, மயங்கி விழுந்தார்.

அதையடுத்து சரிதா தன்னுடைய மகன்களுடன் அங்கிருந்து தப்பிவிட்டார். சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சங்கீதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் எஸ்.பி ஜெயக்குமார்

இதுகுறித்துப் பேசிய விசாரணை அதிகாரிகள், ``சங்கீதாவுக்கும், மேகலைவனுக்கும் இருந்த தொடர்பு தெரிந்து சரிதா கண்டித்திருக்கிறார். அதன்பிறகும் இருவரும் சந்திப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த வாக்குவாதத்தில்தான் மேகலைவனின் காலை உடைத்திருக்கிறார் சரிதா. அப்போது ஏற்பட்ட எலும்பு முறிவுக்காகத்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார் மேகலைவன்.

அங்கு சங்கீதா சென்றதால் கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார் சரிதா. அதனால்தான் அக்கா என்றும் பார்க்காமல் கொலை செய்திருக்கிறார். மேலும் மேகலைவனும், சங்கீதாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்றும் கூறியிருக்கிறார் சரிதா. சரிதாவையும், அவரது மகன்களையும் கைது செய்திருக்கிறோம். விசாரணை முடிவில்தான் முழு உண்மையும் தெரிய வரும்” என்றனர்.

குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி ஊராட்சி மாலைமடைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னகவுண்டா் மகன் சின்னதம்பி (வயது: 62). இவரது மனைவி செல்லம்மாள் (வயது: 48). இவா்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு... மேலும் பார்க்க

கடலூர்: மூன்று முறை கருக்கலைப்பு… ஆபாசமாகப் பேசி, காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். 32 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளம்பெண்னை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தி... மேலும் பார்க்க

சென்னையில் திருட்டு; வெளிநாட்டிலிருந்து கண்டுபிடித்த ஓனர் - வசமாக சிக்கிய பிரபல திருடர்கள்!

சென்னை அசோக்நகர், சீனிவாச பிள்ளை தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ரமணன் (58). இவர் தன்னுடைய மனைவியுடன் பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் அவரது மகள்களை பார்க்க கடந்த 4.4.2025-ம் தேதி சென்றார். 7-ம் தேதி அதிக... மேலும் பார்க்க

கோவை: கல்லூரி மாணவியுடன் பழகிய மாணவர் மீது கொலை வெறி தாக்குதல் - 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்த காரணத்தால் சொந்த அண்ணனே அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆணவ கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இ... மேலும் பார்க்க

கர்நாடகா: மனைவியைக் கொன்றதாகச் கணவனுக்குச் சிறை; உயிரோடு உலா வந்த மனைவி; என்ன நடந்தது?

இறந்த மனைவிக்காக இறுதிச்சடங்கு செய்த, துக்கம் அனுசரித்த கணவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இறந்ததாக நம்பப்பட்ட பெண் உயிரோடு நடமாடிய ஆதிர்ச்சி செய்தி வெளியாகி பரபரப்... மேலும் பார்க்க

மத்திய பிரதேசம்: போலி இதய மருத்துவர்; பறிபோன 7 உயிர்கள்; தப்பித்த சில நோயாளிகள். நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஜான் கெம் என்ற இதயநோய் நிபுணர் பணி செய்து வந்துள்ளார். இவர் செய்த இதய அறுவை சிகிச்சையால் ஒரே மாதத்தில் 7 ... மேலும் பார்க்க