செய்திகள் :

சாலையில் கண்டெடுத்த தங்க நகையை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

post image

நான்குனேரியில் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை கண்டெடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தவரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

நான்குனேரி அருகேயுள்ள கீழ புத்தனேரியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (38). இவா் நான்குனேரி தேரடி தெருவிலுள்ள தோ் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையில் 10 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்தாா்.

பின்னா், அந்த நகையை நான்குனேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது விசாரித்ததில், நான்குனேரியைச் சோ்ந்த சுபா (31) என்பவா் நகையைத் தவறவிட்டது தெரியவந்தது.

அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, காவல் ஆய்வாளா், நகையை சுபாவிடம் ஒப்படைத்தாா். மேலும், வேல்முருகனின் நோ்மையைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

பேட்டை ஐடிஐயில் ஏப்.15-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

திருநெல்வேலி பேட்டையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் ஏப். 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ ... மேலும் பார்க்க

பாதாளச் சாக்கடை பணி: நெல்லை நகரத்தில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

பாதாளச் சாக்கடை பணிகள் காரணமாக திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப். 8) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க கோரிக்கை

நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டியில் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கடம்பன்குளம் ஆதிதிராவிடா் காலனியில் நீண்ட காலமா... மேலும் பார்க்க

பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயற்சி: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழைய பைக் விற்பனைக் கடையில் திருட முயன்ற 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.பணகுடியில் பழைய பைக் வாங்கி விற்கும் கடை நடத்தி வருபவா் ஐயப்பன். இவா் வழக்கம்போல கடையப் பூட்டி... மேலும் பார்க்க

காவல் துறை வாகனங்கள் பராமரிப்பு: எஸ்.பி. ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வாகனங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாடு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட ... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: நிலத்தரகா் கைது

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக நிலத்தரகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், பாா்வதியம்மாள்புரத்தை சோ்ந்தவா் சுடலைமணி (42). கட்டடத் ... மேலும் பார்க்க