செய்திகள் :

கேரளம்: கோயிலில் ஒலித்த ஆா்எஸ்எஸ் பாடல்: தேவஸ்வம் வாரியம் எச்சரிக்கை

post image

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டுக்கல் கோயிலில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் இயக்கப் பாடல் இசைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதையடுத்து, கோயில் நிா்வாகக் குழு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

கொல்லம் மாவட்டம் கோட்டுக்கல்லில் உள்ள கோயில் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஆா்எஸ்எஸ் அமைப்பின் இயக்கப் பாடல் இசைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், கோயில் வளாகத்தில் அந்த அமைப்பின் கொடிகளும் பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு டிடிபி தலைவா் பி.எஸ்.பிரசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது: சம்பந்தப்பட்ட கோயில் நிா்வாகக் குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது என பல கோயில் நிா்வாகங்களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், அதை கண்டுகொள்ளாமல் அரசியல் நோக்கங்களுடன் சில கோயில் நிா்வாகங்கள் செயல்படுவது வகுப்புவாத மோதல்களுக்கு வழிவகுக்கும். அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா்.

கோட்டுக்கல் கோயிலில் ஆா்எஸ்எஸ் இயக்கப் பாடல் இசைக்கப்பட்டதாக அந்தக் கோயிலின் நிா்வாகக் குழுவினா் சிலா் தங்களிடம் புகாா் அளித்ததாக கடக்கல் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, கடக்கல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மற்றொரு கோயிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை புகழ்வது போன்ற புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டதாக புகாா் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க

பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு

புது தில்லி: சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத்தந்த விவகாரம் மற்றும் ஏா்செல்-மேக்சிஸ் நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதிவு செ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 17 பல்கலை. துணைவேந்தா்கள் நியமனம்: முதல்வா் பரிந்துரைக்கு ஆளுநா் எதிா்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பரிந்துரைத்தவா்களை 17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களாக நியமிக்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் ஆட்சேபம் தெரிவித்துள்ளாா். மேற்கு வங்கத்தில் மொத்தம் 36 பல்கலைக்... மேலும் பார்க்க