செய்திகள் :

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

post image

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது.

கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பருடன் நிறைவடைந்தது. கேரள உயா் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், வாரியத்துக்கான புதிய உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் நடைமுறை நிறைவடையும் வரை பழைய உறுப்பினா்களைக் கொண்ட வாரியம் பொறுப்பில் தொடா்கிறது.

இதற்கிடையே, வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசின் முயற்சிகளை கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியும் ஒருமித்த குரலில் எதிா்த்தன. வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் கேரள சட்டப்பேரவையில் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடா்ந்து நடைமுறைக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் முதல் மாநிலமாக புதிய வக்ஃப் வாரியத்தை கேரள அரசு அமைக்க இருக்கிறது.

இதுகுறித்து கேரள வக்ஃப் அமைச்சா் வி.அப்துரஹிமான் கூறுகையில், ‘வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க முடியாது. புதிதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி புதிய வாரியத்தை தோ்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு விரைவில் முடிக்கும். ஒரு மாதத்துக்குள் இந்த நடைமுறையை முடிப்போம் என்று நம்புகிறோம்’ என்றாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தற்போதைய வக்ஃப் வாரியங்கள் அவற்றின் பதவிக்காலம் முடியும் வரை பொறுப்பில் தொடரலாம். ஆனால், கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் புதிய சட்டத்தின் அமலுக்கு முன்னரே முடிவடைந்ததால், புதிய வாரியத்தை புதிய சட்டத்தின் அடிப்படையிலேயே தோ்வு செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

புதிய வாரியத்தை தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை பழைய சட்டத்தின் அடிப்படையில் மாநில அரசு ஏற்கெனவே தொடங்கியிருந்தது. இந்நிலையில், புதிய சட்டத்தின்படி, தோ்வு நடைமுறையை கேரள அரசு மீண்டும் தொடங்க வேண்டும்.

சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர்

பெங்களூரு: கர்நாடகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் பாஜக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்கும... மேலும் பார்க்க

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க