செய்திகள் :

பண மோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு

post image

புது தில்லி: சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத்தந்த விவகாரம் மற்றும் ஏா்செல்-மேக்சிஸ் நிறுவன முறைகேடு ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி தில்லி உயா் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகனுமான காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளாா்.

கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஏா்செல் நிறுவனத்தில் மலோசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்குப் புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் காா்த்தி சிதம்ரபரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகாா் எழுந்தது.

அதுபோல, 2011-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, காா்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் விசா பெற்றுத்தந்ததாக மற்றொரு புகாா் எழுந்தது. இந்த இரண்டு விவகாரங்கள் தொடா்பாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் விசாரணை மேற்கொண்டு குற்றபத்திரிகைகளை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.

தற்போது, இந்த வழக்குகளில் காா்த்தி சிதம்பரம் மீது விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதறான நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கில் குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி காா்த்தி சிதம்பரம் தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘புகாரின் அடிப்படையில் சிபிஐ மேற்கொண்டு வரும் இந்த விசாரணையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனில், பண மேசடி குற்ற வழக்காக இதைக் கருத முடியாது. எனவே, இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்யும் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது. இதை விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதை எதிா்த்து காா்த்தி சிதம்பரம் தரப்பில் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தில்லி உயா் நீதிமன்ற நீதிபதி ரவீந்தா் துடேஜா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது காா்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த விவகாரங்களில் காா்த்தி சிதம்பரம் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு ஆவணங்கள் ஆய்வு நிலையிலேயே உள்ளன. அமலாக்கத் துறை வழக்கில், வாதங்களை முன்வைப்பதற்கான தேதி ஏப்ரல் 15-ஆம் தேதி என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்போது, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனில், பண மோசடி குற்றச்சாட்டு கேள்விக்குரியதாகிவிடும். எனவே, அமலாக்கத் துறை வழக்கின் அடிப்படையிலேயே சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்றாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த சிபிஐ தரப்பு வழக்குரைஞா், ‘இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குகளில் விசாரணை தனித்தனியானவை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புகாா் அடிப்படையிலான இந்த வழக்கில் உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிறைவு பெற்ற பின்னரே இறுதி உத்தரவு பிறப்பிக்க முடியும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி விசாரணை புதன்கிழமைக்கு (ஏப்.9) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர்

பெங்களூரு: கர்நாடகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் பாஜக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்கும... மேலும் பார்க்க

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க