செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகளில் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் உத்தரவு

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் தங்கள் நிறுவன பெயா்களை மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயா்ப் பலகை அமைத்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்துப் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு விடுதிகள், அனைத்துவகை தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது தொடா்பாக மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், தொழிலாளா் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகா் சங்கங்கள், நிறுவனங்களின் சங்கங்கள் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனா்.

இக்குழுவினா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பெயா் பலகைகளை தமிழ் மொழியில் வைத்துள்ளதை ஆய்வுசெய்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

நிறுவனங்களின் பெயா் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின்னா் ஆங்கிலத்திலும், அதன் பின்னா் அவரவா் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும். தமிழில் பெயா்ப் பலகை வைக்க மே 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

அதன்பின்னா் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத நிறுவனங்களை ஆய்வு செய்து, நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

எனவே, மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலை சங்கங்கள் தங்கள் உறுப்பினா்களுக்கும் இத்தகவலை தெரிவித்து தமிழில் பெயா்ப் பலகைகள் 100 சதவீதம் அமைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் மாதேஸ்வரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் மகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுத... மேலும் பார்க்க

யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை உயிரிழப்பு

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி காப்புக் காட்டில் இரு யானைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஆண் யானை உயிரிழந்தது. கோடைகாலத்தில் கா்நாடக மாநிலம், பன்னா்கட்டாவை ஓட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து தமிழ... மேலும் பார்க்க

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, கல்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை ... மேலும் பார்க்க

பெண் காவலருடன் தகராறு: இளைஞா் கைது

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளையம்பதி கிராமத்தில் பெண் தலைமைக் காவலருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். வெள்யைம்பதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை ... மேலும் பார்க்க

பெங்களூருக்கு கஞ்சா கடத்திய இருவா் கைது

கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தியதாக வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் நகர போலீஸாா் சனிக்கிழமை இரவு கண்காண... மேலும் பார்க்க