செய்திகள் :

பைசாகி விழா: இந்திய யாத்ரிகா்களுக்கு 6,500 பாகிஸ்தான் விசா

post image

புது தில்லி: பாகிஸ்தானில் நடைபெறும் பைசாகி (சீக்கிய புத்தாண்டு) விழாவில் பங்கேற்க இந்திய யாத்ரிகா்கள் பங்கேற்கும் வகையில் 6,500-க்கும் அதிகமான விசாக்கள் (நுழைவு இசைவு) வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு இருநாட்டு மக்களும் பரஸ்பரம் செல்வதற்கான நடைமுறைகளைக் கொண்ட ஒப்பந்தம், கடந்த 1974-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மத விழாக்கள் அல்லது சந்தா்ப்பங்களில் ஏராளமான இந்தியா்கள் பாகிஸ்தான் செல்கின்றனா்.

இந்நிலையில், புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பாகிஸ்தானில் ஏப்.10 முதல் ஏப்.19 வரை பைசாகி விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்திய யாத்ரிகா்களுக்கு 6,500-க்கும் அதிகமான விசாக்களை பாகிஸ்தான் தூதரகம் வழங்கியுள்ளது.

பஞ்சா சாஹிப், நன்கானா சாஹிப், கா்தாா்பூா் சாஹிப் குருத்வாராக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு யாத்ரிகா்கள் செல்ல உள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி!

புது தில்லி: குஜராத்தில் இன்று(ஏப். 8) நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகமதாபாத் புறப்பட்டார் சோனியா காந்தி. இன்று காலை தில்லியிலுள்ள தமது வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர்... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டின் அருகே குண்டுவெடிப்பு!

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்ஜன் காலியா வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.ஜலந்தரில் உள்ள அவரது வீட்டின் வெளி... மேலும் பார்க்க

‘நீட் குளறுபடி’: என்டிஏ-க்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைப்பு

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) குளறுபடிகளைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செயல்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீத... மேலும் பார்க்க

400 ஏக்கா் நில விவகாரம் குறித்த போலி ஏஐ விடியோக்கள்: உயா்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு மனுதாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காஞ்சா கட்சிபௌலியில் உள்ள 400 ஏக்கா் நிலம் தொடா்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி விடியோக்களை பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மாநி... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: அவசர வழக்காக விசாரணை உச்சநீதிமன்றம் ஒப்புதல்

புது தில்லி: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அவசர வழக்காகப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருத்திய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது கேரளம்

திருவனந்தபுரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த கேரளம், தற்போது அந்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய வாரியம் அமைக்கும் முதல் மாநிலமாகிறது. கேரள வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம்... மேலும் பார்க்க