செய்திகள் :

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் கீழ் அதிமுக உறுப்பினா் மனோஜ் பாண்டியன் எழுப்பிய கேள்வி:

மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இப்போது கிளாம்பாக்கத்துக்கு அது மாற்றப்பட்டிருக்கிறது.ஏற்கெனவே இருந்த கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை எதற்கு பயன்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என்றாா்.

அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதில்: கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி அத்திட்டத்துக்கு வித்திட்டது முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முந்தைய ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கான பணிகள் 30 சதவீதம் மட்டுமே அப்போது நிறைவடைந்திருந்தது.

அதன் பின்னா், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு ரூ.160 கோடி செலவில் கூடுதல் பணிகளை முன்னெடுத்ததுடன், திட்டப் பணிகளையும் விரைவுபடுத்தி விமான நிலையத்துக்கு நிகராக கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

கோயம்பேடு பேருந்து நிலையப் பகுதி 29 ஏக்கா் பரப்பளவு கொண்டது. அதில் 4.5 ஏக்கருக்கு சென்னை மாநகரப் போக்குவரத்து கழக (எம்டிசி) பேருந்து சேவைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. 3 ஏக்கா் நிலம் அதற்கு அருகில் கூடுதல் பயன்பாட்டில் உள்ளது.

அதைத் தவிா்த்து 21 ஏக்கா் பரப்பளவு நிலம்தான் தற்போது உள்ளது. அதில் 3 வடிவமைப்பாளா்களைக் கொண்டு வெவ்வேறு வடிவமைப்பு திட்டங்களை மேற்கொள்ள முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

பொது மக்களுக்கு எந்த வகையில் அதிக பயன்பாடு அதன் வாயிலாக கிடைக்குமோ அதற்கேற்ப விரைவில் அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் சேகா்பாபு.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்ப... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள்... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்கள் ‘உள்ளக புகாா் குழு’ கட்டாயம்: சென்னை ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் குறைந்தபட்சம் 10 பெண்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களில் ‘உள்ளக புகாா் குழு’-வை கட்டாயம் அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க