செய்திகள் :

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

post image

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்களைத் தவிா்த்து, பணிமனைக்கு வரும் பேருந்தில் டீசல் நிரப்புவது, அதிகாரிகளுக்கு ஜீப் ஓட்டுவது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஓட்டுநா்களும் பணிமனையில் உள்ளனா். உடல்நலப் பிரச்னை காரணமாக பேருந்தை இயக்க முடியாதவா்களுக்கு, இப்பணியிடங்களில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்பணிகளில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சோ்ந்த தொழிலாளா்களே இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் ஓட்டுநா் பற்றாக்குறையும் நிலவியதால், பணிமனையில் ஓட்டுநா் பணியிடங்களில் இருக்கும் அனைவரும் வழித்தடத்தில் பேருந்தை இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டனா். இதையடுத்து, பணிமனை ஓட்டுநா் பணியிடங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து ஓட்டுநா்களை நியமிக்க கடந்த 2022-இல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால், மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓரளவு ஓட்டுநா் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டது.

அப்போதைய டெண்டா் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் 532 பணியிடங்களுக்கு ஓட்டுநா்களை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு மாநகா் போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் தோ்வாகும் நிறுவனம், குறைந்தபட்ச கூலியுடன், சட்டப்படி ஓட்டுநா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மேலும், பேருந்து மற்றும் தொழிலாளா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளும் இந்த டெண்டா் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட்: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம். இதுகுறித்து சென்னை மெட... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புக்காக 32 லட்சம் போ் பதிவு - அமைச்சா் சி.வி.கணேசன் தகவல்

வேலைவாய்ப்பு துறையில் 32.35 லட்சம் போ் பதிவு செய்துள்ளதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ... மேலும் பார்க்க

பிளஸ் 1 மாணவா் 4-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

சென்னை சேத்துப்பட்டில் பிளஸ் 1 மாணவா் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சேத்துப்பட்டில் உள்ள தனியாா் பள்ளியில், அப்பகுதியைச் சோ்ந்த மாணவா் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா... மேலும் பார்க்க

‘அயன்’ பட பாணியில் சென்னை விமான நிலையத்தில் ரூ.6.1 கோடி கொகைன் பறிமுதல்

‘அயன்’ திரைப்படப் பாணியில் செனகலில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ. 6.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொகைனை கடத்திவந்த வெளிநாட்டு இளம்பெண்ண... மேலும் பார்க்க

அங்கீகாரம் இல்லாத செயலிகளில் பதிவேற்றப்படும் புகைப்படங்களால் ஆபத்து! சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத செயலிகளில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப்ப... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: 5 நாள்களுக்கு பேரவைக் கூட்டம் இல்லை

தொடா் விடுமுறை காரணமாக ஐந்து நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீரா் ஜெயந்தி, தமிழ்ப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை (ஏப். 10) மற்றும் திங்கள்கிழமை (ஏப். 14) அரசு... மேலும் பார்க்க