செய்திகள் :

நெல்லை: பென்சில் தகராறில் 8-ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; சக மாணவர் வெறிச்செயல்!

post image

நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதனை ஒழிக்க மாணவர்கள் மத்தியில் கல்வித்துறையினர் , காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவை குறைந்தபாடில்லை. ’தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு’ என அழைக்கப்படும் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது.

அரிவாள் வெட்டு நடந்த தனியார் பள்ளி

இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம்போல் அப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வந்தனர். 8-ம் வகுப்பு பிரிவு ஒன்றில் பயிலும் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மாணவர், தனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த மாணவரை வெட்டியுள்ளார்.

இதில் மூன்று இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக அறிவியல் பாட ஆசிரியை ரேவதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. உடனே சக மாணவர்கள் அலறல் சத்தம் போட்டனர். அரிவாளுடன் தன் சட்டையில் ரத்தம் சொட்டச் சொட்ட  பள்ளியில் இருந்து வேகமாக ஓடிய அந்த மாணவர், பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

போலீஸார் விசாரணை

பதறிய போலீஸார் மாணவரிடம் நடத்திய விசாரணையில் அரிவாள் வெட்டு சம்பவத்தைக் கூறியுள்ளார்.  இதற்கிடையில் காயமடைந்த மாணவர் மற்றும் ஆசிரியை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி தலைமையிலான போலீஸார், அரிவாளால் வெட்டும் அளவிற்கு அவர்களுக்கு இடையே என்ன மோதலுக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தினர்.   

இது குறித்து நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் சுரேஷ் கூறுகையில், “இரண்டு மாணவர்களும் நெருங்கிய நண்பர்களாக நட்பாகத்தான் இருந்து வந்துள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பென்சில் வாங்கியது தொடர்பாக வகுப்பறையிலேயே வாக்குவாதம் வந்துள்ளது. இதை அறிந்த ஆசிரியை இருவரையும் கண்டித்ததுடன், இருவரின் பெற்றோருக்கும் தகவலைச் சொல்லி அவர்களை அழைத்து அவர்கள் மத்தியிலும் மாணவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு அந்த மாணவர் புத்தகப்பையில் அரிவாளை மறைத்து எடுத்து வந்து வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்துள்ளது. ஆனாலும், இருவருக்கும் லேசான காயம்தான் ஏற்பட்டுள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். தொடர்ந்து மாணவரிடம் விசாரித்து வருகிறோம்” என்றார்.

போலீஸார் விசாரணை

”அரசுப் பள்ளிகளில் தொடர்வதைப்போல, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புத்தகப்பைகளை பள்ளி நிர்வாகம் சோதனையிட வேண்டும்” என நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  இந்த நிலையில் ,  பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், ”எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை” எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பிற்காக 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.   

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ... மேலும் பார்க்க

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோ... மேலும் பார்க்க

மழை ஈரப்பதம்: கட்டுமான பணியின்போது மண்சுவர் விழுந்து தொழிலாளி பலி! - கரூர் சோகம்

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பஞ்சமாதேவியைச் சேர்ந்த காளியப்பன் மகன் பொன்னுசாமி என்பவரது புதிய வீடு கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் கரூர் உப்பிடமங்கலம் அருக... மேலும் பார்க்க

செருப்பால் அடித்த டெக்னீஷியன்; வெளுத்து வாங்கிய தூய்மை பணியாளர்கள்! - மருத்துவமனையில் நடந்தது என்ன?

அருப்புக்கோட்டையில் துப்புரவு பணியாளரை மருத்துவமனை‌ ஊழியர் செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "... மேலும் பார்க்க